இந்திய டெலிகாம் துறையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையிலும், வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்காகப் பிஎஸ்என்எல் அவ்வப்போது புதிய புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா முழுவதையும் இணைக்கும் பிஎஸ்என்எல் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டுச் சிம்-களை இலவசமாகக் கொடுக்க முடிவு செய்துள்ளது.
இன்றளவும் இந்தியாவின் சிறு குறு கிராமங்களை இணைப்பதில் பிஎஸ்என்எல் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை. அந்த வகையில் நாடு முழுவதும் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற ஓரே நோக்கத்திற்காக ஃப்ரி சிம் ஆஃபரை அறிவித்துள்ளது.
பிஎஸ்என்எல்
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் வேளையில், பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதோடு தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல திட்டங்களை அறிவித்து வருகிறது பிஎஸ்என்எல்.
20 ரூபாய் கட்டணம்
இந்தியாவில் இயங்கி வரும் பிற தனியார் மற்றும் பொதுத்துறை டெலிகாம் நிறுவனங்களைப் போலவே பிஎஸ்என்எல் நிறுவனத்திலும் சிம் வாங்க வேண்டும் என்றால் 20 ரூபாய் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
ஆனால் தற்போது பிஎஸ்என்எல் சிறப்புத் திட்டமாகப் புதிய வாடிக்கையாளர்களுக்குச் சில முக்கிய விதிமுறையோடு ஃப்ரி சிம் கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
குறைந்தபட்சம் 100 ரூபாய்
பிஎஸ்என்எல்-ன் சிறப்புத் திட்டத்தின் ஃப்ரி சிம் வாங்குவோர் முதல் முறை ரீசார்ஜ் செய்யும் போது குறைந்தபட்சம் 100 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதை முக்கிய நிபந்தனையாக வைத்துள்ளது.
இதனால் பிஎஸ்என்எல்-ன் சிறப்புத் திட்டத்தின் கீழ் 100 ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு ரீசார்ஜ் செய்தால் மட்டுமே ஃப்ரி சிம் பெற முடியும்.
குறுகிய காலச் சலுகை
மேலும் இந்த ப்ரீ சிம் குறைந்த காலகட்டத்திற்கு மட்டுமே பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. அதனால் பிஎஸ்என்எல் வாங்க விரும்புவோர் நவம்பர் 28ஆம் தேதிக்குள் வாங்க வேண்டியது அவசியம்.
நவம்பர் 29ஆம் தேதிக்குப் பின் மீண்டும் 20 ரூபாய் கட்டணம் நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
எப்படி ஃப்ரி சிம் வாங்குவது
இந்த ஃப்ரீ சிம் வாங்க அருகில் உள்ள பிஎஸ்என்எல் ரீடைல் கிளைகளுக்குத் தகுந்த அடையாள சான்றிதழ் உடன் சென்றால் அடுத்த 10 முதல் 15 நிமிடத்தில் இப்புதிய சிறப்புத் திட்டத்தின் கீழ் ஃப்ரீ சிம் கிடைக்கும்.
பிராண்ட்பேன்ட் சேவை
மேலும் பிஎஸ்என்எல் புதிதாக 599 ரூபாய் விலையில் பிராண்ட்பேன்ட் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதோடு பைபர் பேசிக் பிளஶ் திட்டத்தின் கீழ் 60MBPS வேகத்தில் 3300ஜிபி டேட்டா மற்றும் 24 மணிநேர அன்லிமிடெட் காலிங் வசதியைக் கொடுக்கிறது பிஎஸ்என்எல்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications