மத்திய அரசின் டெலிகாம் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியுள்ளது. BSNL நிறுவனம் முதற்கட்ட அறிமுகத்தில் இந்த முக்கிய சாதனையை படைத்துள்ளது. பஞ்சாப், ஹரியாணா, இமாசல பிரதேசம், உத்தராகண்ட், மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே BSNL தற்போது 4ஜி சேவை உள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீஸஸின் கன்சார்டியத்தில் உள்ள டாடா குரூப் நிறுவனமான தேஜாஸ் நெட்வொர்க்ஸ் மற்றும் சென்டர் பார் டெவலப்மென்ட் ஆப் டெலிமாடிக்ஸ் இணைந்து 4ஜி சேவையை BSNL நிறுவனத்திற்கு வழங்குகிறது.

BSNL 4ஜி நெட்வொர்க்-ஐ கிழக்கு, மேற்கு, தெற்கு பிராந்தியங்களில் ஆகஸ்ட் மாதத்துக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று பிஎஸ்என்எல் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த 12 மாதங்களுக்குள் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. 4ஜி சேவைக்காக 3500 டவர்களை பிஎஸ்என்எல் நிறுவனம் நாடுமுழுவதும் அமைத்துள்ளது. இதுவரை 20,000க்கும் மேற்பட்ட டவர்கள் நிறுவப்பட்டுள்ளன.
2023 மே மாதத்தில் மத்திய டெலிகாம் மற்றும் ஐடி அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 10 கோடி 4ஜி வாடிக்கையாளர்களை அடுத்த 12 முதல் 24 மாதங்களுக்குள் ஈர்த்து நாடுமுழுவதும் 1 லட்சம் டவர்களை நிறுவ உள்ளதாகக் கூறினார்.
4ஜி சேவை இல்லாத காரணத்தால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவதால் கவலைப்பட்ட BSNL ஊழியர்கள் பிஎஸ்என்எல்-ஐ வோடாபோன் ஐடியாவின் 4ஜி நெட்வொர்ககை பயன்படுத்த அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4G என்பது நான்காவது தலைமுறை வயர்லெஸ்ஸுக்கான குறுகிய பெயர். 3ஜி உடன் ஒப்பிடும்போது 4ஜி நெட்வொர்க்குகள் வேகமான டேட்டா டவுண்லோடு, அப்லோடு வேகத்தை வழங்குகின்றன.
4G என்பது மொபைல் நெட்வொர்க் தொழில்நுட்பத்தின் நான்காவது தலைமுறையாகும், இது 3G இன் வாரிசு மற்றும் 5G நெட்வொர்க்கால் முன்னோடியாக உள்ளது. இது அதன் வாரிசு நெட்வொர்க்குகளை விட அதிக டேட்டா டிரான்ஸ்பர் வேகத்தை வழங்குகிறது. இது வேகமான வாழ்க்கை முறையின் இந்த கட்டத்தில் விரும்பத்தக்கதாக அமைகிறது.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications