அரசு தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் புதுச்சேரியில் மூன்று புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.
Intranet TV (BiTV): புதுச்சேரியில் பிஎஸ் என் எல் நிறுவனம் சார்பாக பிஐ டிவி என்ற சேவை சோதனை ஓட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு கூடுதல் கட்டணமும் செலுத்தாமல் 300 தொலைக்காட்சிகளை நேரலையில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் டாக்குமென்டரிகள் உள்ளிட்டவற்றை பல்வேறு மொழிகளிலும் பிஎஸ்என்எல் மொபைல் இன்ட்ராநெட்டின் BiTV வழியாக வாடிக்கையாளர்கள் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடிடிபிளே- உடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம் செய்து இந்த சேவையை வழங்குகிறது.

எங்கிருந்தும் இலவசமாக இந்த பிஐ டிவி பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் பார்க்கலாம் என பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரி ராபர்ட் ரவி தெரிவித்துள்ளார்.
மொபைல் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை கொண்டு வரப்பட்டுள்ளது. பிஐ டிவி சேவை அடுத்த மாதத்தில் இந்த சேவையானது உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் நாடு முழுவதும் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வை-ஃபை கிராமம்: புதுச்சேரி மாநிலத்தின் மண்ணடிப்பட்டு கிராமம் வைஃபை கிராமமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே முழுவதுமாக வைஃபை சேவை பெற்ற இரண்டாவது கிராமம் என்ற பெருமை மண்ணடிப்பட்டு கிராமத்திற்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்த கிராமத்தில் இருக்கும் வைஃபை ஹாட்ஸ்பாட்டுகளை பயன்படுத்தி அனைவருமே வைஃபை சேவையை பெற்றுக் கொள்ள முடியும்.
பிஎஸ்என்எல் FTTH சப்ஸ்க்ரைபர்கள் எந்த ஒரு பிஎஸ்என்எல் வைஃபை ஹாட்ஸ்பாட் மூலமாகவும் டேட்டா கனெக்சனை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக பிஎஸ்என்எல் மொபைல் வாடிக்கையாளர்கள் ஒருமுறை பதிவு செய்தாலே போதும் எங்கெல்லாம் பிஎஸ்என்எல் வைஃபை கிடைக்கிறதோ அங்கெல்லாம் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் அல்லாத வாடிக்கையாளர்கள் யுபிஐ பேமென்ட் வழியாக கட்டணம் செலுத்தி இந்த ஹாட்ஸ்பாட் வசதிகளை பெற முடியும்.
Intranet Fibre-based TV (IFTV): பிஎஸ்என்எல் நிறுவனம் ஐஎஃப் டிவி என்ற புதிய இண்ட்ராநெட் சேவையை புதுச்சேரியில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரியை சேர்ந்த FTTH சந்தாதாரர்கள் 500க்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரலையில் காண முடிவு.
இதற்காக அவர்கள் எந்த ஒரு கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இதற்கான அனுமதியை ஒரு முறை வழங்கினால் போதும் வாடிக்கையாளர்கள் பல்வேறு நிகழ்ச்சிகள், படங்கள், ஆவணப் படங்களை எந்த ஒரு இடையூறும் இன்றி எளிதாக கண்டுகளிக்கலாம்.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications