BSNL இன் 4G, 5G.. மத்திய அமைச்சர் முக்கிய அப்டேட்..!!

அரசு நடத்தும் தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களைப் போல விரைவில் 4G மற்றும் 5G சேவைகளை நாடு முழுவதும் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த சேவைகள் பிஎஸ்என்எல்லில் இல்லாததால் பலர் இன்னும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறாமல் உள்ளனர். இந்த நிலையில், இப்போது பிஎஸ்என்எல் தனது சேவையை மேலும் மேம்படுத்த மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.

சமீப காலமாக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியதை அடுத்து அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மீது அனைவரது பார்வையும் விழுந்தது. மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மலிவான சேவையை வழங்குகிறது. எனவே, பலர் தங்கள் எண்களை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு போர்ட் செய்து வருகின்றனர். மற்ற நிறுவனங்களைப் போல, BSNL இன்னும் 4G மற்றும் 5G சேவைகளை நாடு முழுவதும் தொடங்கவில்லை. இதனால் பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.

BSNL இன் 4G, 5G.. மத்திய அமைச்சர் முக்கிய அப்டேட்..!!

பிஎஸ்என்எல் 4ஜி சேவை மே 2025க்குள் நாடு முழுவதும் செயல்படத் தொடங்கும்:பிஎஸ்என்எல்லின் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளுக்கு அரசு உதவியுடன், மிக விரைவில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களும் தனியார் நிறுவனங்களைப் போல நல்ல நெட்வொர்க் மற்றும் வேகமான இணைய வேகத்தைப் பெறத் தொடங்குவார்கள் என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை ஒரு லட்சம் அடிப்படை நிலையங்கள் மூலம் செயல்படுத்தும் பணியை பிஎஸ்என்எல் நிறைவு செய்யும் என்றும், அதன்பிறகு 5ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கும் அமைச்சர் கூறியுள்ளார்.

பிஎஸ்என்எல் 5G ஜூன் 2025 முதல் அதன் சேவையை தொடங்கும்: அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பிஎஸ்என்எல் 5ஜி சேவையை தொடங்கும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், இப்போது எங்களிடம் ஒரு முக்கிய மற்றும் ரேடியோ அணுகல் நெட்வொர்க் உள்ளது என்றும் அவை முழுமையாக செயல்படுகின்றன. அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்திற்குள் ஒரு லட்சம் தளங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். நேற்று வரை 38,300 தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இதன்மூலம் சொந்த 4G நெட்வொர்க்கைத் தொடங்கவும், இது ஜூன் 2025க்குள் 5Gக்கு மாறும் என்று தெரிவித்துள்ளார்.

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், அரசு நிறுவனமான சி-டாட் மற்றும் உள்நாட்டு ஐடி நிறுவனமான டிசிஎஸ் ஆகியவற்றுடன் கைகோர்த்து 4ஜி சேவையில் தற்போது செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில், நாட்டில் 22 மாதங்களில் 4.5 லட்சம் டவர்களை நிறுவப்பட்டதன் மூலம் 5G தொழில்நுட்பத்தை உலகிலேயே மிக வேகமாக இந்தியா செயல்படுத்தியதாகவும், இந்த சேவை நாட்டின் 80 சதவீத மக்களுக்கு கிடைக்கிறது என்றும் மத்திய ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

அதேபோல், 10 ஆண்டுகளுக்கு முன்பு 60 மில்லியனாக இருந்த பிராட்பேண்ட் இணைப்புகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து 940 மில்லியனாக இந்திய தொலைத்தொடர்பு துறையில் முழுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+