அரசு நடத்தும் தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களைப் போல விரைவில் 4G மற்றும் 5G சேவைகளை நாடு முழுவதும் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த சேவைகள் பிஎஸ்என்எல்லில் இல்லாததால் பலர் இன்னும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறாமல் உள்ளனர். இந்த நிலையில், இப்போது பிஎஸ்என்எல் தனது சேவையை மேலும் மேம்படுத்த மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.
சமீப காலமாக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியதை அடுத்து அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மீது அனைவரது பார்வையும் விழுந்தது. மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மலிவான சேவையை வழங்குகிறது. எனவே, பலர் தங்கள் எண்களை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு போர்ட் செய்து வருகின்றனர். மற்ற நிறுவனங்களைப் போல, BSNL இன்னும் 4G மற்றும் 5G சேவைகளை நாடு முழுவதும் தொடங்கவில்லை. இதனால் பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.

பிஎஸ்என்எல் 4ஜி சேவை மே 2025க்குள் நாடு முழுவதும் செயல்படத் தொடங்கும்:பிஎஸ்என்எல்லின் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளுக்கு அரசு உதவியுடன், மிக விரைவில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களும் தனியார் நிறுவனங்களைப் போல நல்ல நெட்வொர்க் மற்றும் வேகமான இணைய வேகத்தைப் பெறத் தொடங்குவார்கள் என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை ஒரு லட்சம் அடிப்படை நிலையங்கள் மூலம் செயல்படுத்தும் பணியை பிஎஸ்என்எல் நிறைவு செய்யும் என்றும், அதன்பிறகு 5ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கும் அமைச்சர் கூறியுள்ளார்.
பிஎஸ்என்எல் 5G ஜூன் 2025 முதல் அதன் சேவையை தொடங்கும்: அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பிஎஸ்என்எல் 5ஜி சேவையை தொடங்கும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், இப்போது எங்களிடம் ஒரு முக்கிய மற்றும் ரேடியோ அணுகல் நெட்வொர்க் உள்ளது என்றும் அவை முழுமையாக செயல்படுகின்றன. அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்திற்குள் ஒரு லட்சம் தளங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். நேற்று வரை 38,300 தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இதன்மூலம் சொந்த 4G நெட்வொர்க்கைத் தொடங்கவும், இது ஜூன் 2025க்குள் 5Gக்கு மாறும் என்று தெரிவித்துள்ளார்.
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், அரசு நிறுவனமான சி-டாட் மற்றும் உள்நாட்டு ஐடி நிறுவனமான டிசிஎஸ் ஆகியவற்றுடன் கைகோர்த்து 4ஜி சேவையில் தற்போது செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில், நாட்டில் 22 மாதங்களில் 4.5 லட்சம் டவர்களை நிறுவப்பட்டதன் மூலம் 5G தொழில்நுட்பத்தை உலகிலேயே மிக வேகமாக இந்தியா செயல்படுத்தியதாகவும், இந்த சேவை நாட்டின் 80 சதவீத மக்களுக்கு கிடைக்கிறது என்றும் மத்திய ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.
அதேபோல், 10 ஆண்டுகளுக்கு முன்பு 60 மில்லியனாக இருந்த பிராட்பேண்ட் இணைப்புகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து 940 மில்லியனாக இந்திய தொலைத்தொடர்பு துறையில் முழுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications