இந்திய டெலிகாம் சந்தையில் தற்போது தனியார் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) மோசமான சேவை தரத்துடன் நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் வர்த்தகத்தை இழந்து வருகிறது.
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகப் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்திற்காக முக்கியமான முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
பிஎஸ்என்எல் - பிபிஎன்எல் இணைப்பு
மத்திய அமைச்சரவை புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (பிபிஎன்எல்)-ஐ மத்திய அரசுக்குச் சொந்தமான டெலிகாம் சேவை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) உடன் இணைக்க ஒப்புதல் அளித்தது உள்ளது.
ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்
இந்த இணைப்பின் மூலம், BSNL நிறுவனம் இந்தியாவில் கூடுதலாக 5.67 லட்சம் கிலோமீட்டர் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்-ஐ பெறுகிறது. இந்த ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் நாட்டிலுள்ள 1.85 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் யுனிவர்சல் சர்வீஸ் ஒப்லிகேஷன் ஃபண்ட் (USOF) மூலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது BSNL நிறுவனம் 6.83 லட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமான ஆப்டிகல் ஃபைபர் கேபிள் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது.
1.64 லட்சம் கோடி ரூபாய்
மேலும், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 1,64,156 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் சரிவில் இருந்து மீண்டு வர புத்துயிர் பேக்கேஜ் அறிவித்தார். இதுபோன்று கடைசி மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 2019ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
3 முக்கியமான விஷயங்கள்
இந்த முதலீட்டை வைத்து பிஎஸ்என்எல் 3 முக்கியமான விஷயங்களைச் செய்ய உள்ளது.முதலில் பிஎஸ்என்எல் தனது சேவை மற்றும் தரத்தை மேம்படுத்துவது, இந்நிறுவனத்தின் நிதிநிலையை மேம்படுத்துவது, பிஎஸ்என்எல் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்-ஐ விரிவாக்கம் செய்வது
ஏப்ரல் 2022
இந்தியா கிராமங்களில் இண்டர்நெட் சேவையை அளிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (பிபிஎன்எல்) நிறுவனத்திற்கு SPV-ஐ ஏப்ரல் 2022-ல் உருவாக்கியது. இதன் வாயிலாகத் தான் தற்போது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) உடன் இணைக்க ஒப்புதல் அளித்தது உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications