மளிகை கடைக்காரரின் மகனான பிடெக் மாணவர் ஒருவர் அமேசான், காக்னிசன்ட் ஆகிய நிறுவனங்களில் இருந்து வேலை கிடைத்த போதிலும் அதில் சேராமல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மட்டுமே வேலையில் சேருவேன் என்று உறுதியாக இருந்து அந்த வேலையையும் அவர் பெற்றுள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஏன் தான் வேலை பார்க்க வேண்டும் என்று விரும்பியதன் காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.
அவர் நினைத்தபடியே தற்போது அவருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ரூபாய் 50 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ள நிலையில் அந்த மாணவருக்கு அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மைக்ரோசாப்ட் வேலை
தந்தை மளிகைக்கடைக்கார மற்றும் தாயார் இல்லத்தரசி என்ற குடும்ப சூழ்நிலை கொண்ட ஹரியானாவை சேர்ந்த பிடெக் மாணவர் மதுர் ரகேஜா. இவர் அமேசான், காக்னிசன்ட் ஆகிய நிறுவனங்களின் வேலையை நிராகரித்த நிலையில் அவருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ரூ.50 லட்சம் சம்பளத்தில் கிடைத்த வேலை வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.
பிடெக் படிப்பு
ஹரியானாவைச் சேர்ந்த மதுர் ரகேஜா, டெஹ்ராடூனில் உள்ள பல்துறைப் பல்கலைகழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் எண்ணெய் மற்றும் எரிவாயு தகவல் தொடர்பான பிடெக் படிப்பை முடித்தார்.
ஆர்வம்
தனது படிப்பு மற்றும் வேலையின் எதிர்பார்ப்பு குறித்து பேசிய ரகேஜா, 'உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் திறன் கொண்ட படிப்பில் நான் ஆர்வமாக இருந்தேன். அதற்காக கணினி அறிவியல் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருதேன். அப்போதுதான் கணினி அறிவியல் பிரிவில் எண்ணெய் மற்றும் எரிவாயு தகவல்களில் நிபுணத்துவம் படிப்பு உள்ளது என்பதை நான் அறிந்து அந்த படிப்பை தேர்வு செய்தேன்.
வேலை
நான் படித்து முடித்தவுடன் எந்தெந்த நிறுவனத்தில் வேலையில் சேர வேண்டும் என்ற பட்டியலை என் மனதில் வைத்திருந்தேன். மைக்ரோசாப்ட் அந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. அந்நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதற்கு தேவையான திறன்களை வளர்த்து கொண்டு நேர்காணலுக்கு தயாரானேன். அமேசான், டிஇ ஷா, ஆப்டம், காக்னிசன்ட் மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பிற நிறுவனங்களுக்கும் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தேன்.
மைக்ரோசாப்ட்
எனக்கு அமேசானிலிருந்து இன்டர்ன்ஷிப் சலுகையுடன் கூடிய வேலைவாய்ப்பு கிடைத்தது. அதேபோல் மைக்ரோசாப்ட், ஆப்டம் மற்றும் காக்னிசென்ட் ஆகியவற்றிலிருந்தும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் மைக்ரோசாப்டை தேர்வு செய்தேன்
என்ன காரணம்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நல்ல சம்பளம் உள்பட பல்வேறு சலுகைகள் மற்றும் பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்களை தொடர ஊக்குவிக்கும் தன்மை ஆகியவை காரணமாக இந்நிறுவனத்தை தேர்வு செய்தேன் என்று மதுர் ரகேஜா கூறினார். இவருக்கு தற்போது பெங்களூரில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளதால் விரைவில் அவர் பெங்களூரில் குடியேறவுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications