டெல்லி: நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் தற்போது தொடங்கி நடந்து வருகிறது.
இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இன்று காலை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் தொடங்கியது.
பொருளாதார மந்தநிலையை மேம்படுத்தும் அறிவிப்புகள், வேலைவாய்ப்பு, தங்க கையிருப்பு, பணமதிப்பு, வருமான வரிக் குறைப்பு,ஜிஎஸ்டி வரிக் குறைப்பு, வட்டிக் குறைப்பு, உள்ளிட்ட அறிவிப்புகள் இதில் வெளியாக வாய்ப்புள்ளது. பட்ஜெட் குறித்த கூடுதல் தகவலுக்கு இங்கே இணைந்திருங்கள்.