சென்னை: முதலீட்டாளர், வணிகம் மற்றும் நுகர்வோர் நம்பிக்கையை மீண்டும் பெற உதவும் பட்ஜெட்டை முன்வைப்பதே மோடி அரசின், முன் நிற்கும், மூன்று முக்கிய சவால்கள் என்று கர்மா கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவனர் நந்திதா பார்க்கர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி, தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு, நந்திதா பார்க்கர் அளித்துள்ள பேட்டியில் இத்கவல்களை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதை பாருங்கள்: வளர்ந்து வரும் நிலையில், மார்க்கெட்டை ஈர்ப்பதில், இந்தியா முதலிடத்தில் இருந்தது. இன்று அது தொலைதூர நிலை போல் தோன்றினாலும், அந்த முதலிடத்தை மீண்டும் பெறுவதற்கு அரசு நினைத்தால், நிறைய செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்,
வரி விதிப்பு
வரிவிதிப்பு, ஒழுங்குமுறை, அதிக கட்டுப்பாடு, மைக்ரோ மேனேஜ்மென்ட் பற்றிய பிரச்சினைகளை தவிர, வணிகர்களுக்கு, செலுத்த வேண்டிய நிலுவைகளை செலுத்த வேண்டும். மத்திய அரசு மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளை, செலுத்த வேண்டும். மேலும் மாநில அரசுகள், விற்பனையாளர்கள், சப்ளையர்கள், ஒப்பந்தக்காரர்கள் ஆகியோருக்கு நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும்.
மூலதன ஆதாய வரி
முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, வெளிநாட்டு மூலதன முதலீடுகளுக்கு இது ஒரு தடையாக செயல்படுவதால் நீண்டகால மூலதன ஆதாய வரியை நீக்க வேண்டும். இது உலக விதிமுறைகளுக்கு ஏற்ப இந்தியாவை கொண்டு வரும்.
புது வேலைவாய்ப்புகள்
இரண்டாவது பெரிய விஷயம் என்னவென்றால், வெளிநாட்டு நிதிகளை இந்தியாவுக்கு நகர்த்துவதற்கும், இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கும் அனுமதிப்பதாகும். 100,000 புதிய வேலைவாய்ப்புகளை இது உருவாக்கும். அரசாங்கத்திற்கு பில்லியன் கணக்கான டாலர் வரி வருவாயை உருவாக்கவும் உதவும்.
விலை உயர்வு
முந்தைய ஆண்டின் இறுதியில் காணப்பட்ட சிறிய மற்றும் மிட்-கேப் பங்குகளின் மீட்பு இந்த ஆண்டு தொடர்கிறது. இந்த போக்கு ஆண்டு முழுவதும் தொடரும் வாய்ப்புள்ளது. அதிக தொலைத் தொடர்பு கட்டணங்கள் மற்றும் எஃகு தயாரிப்பாளர்களாக பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றின் மூலம் மீட்புகளால் வருவாய் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு நந்திதா பார்க்கர் தெரிவித்தார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications