சென்னை: முதலீட்டாளர், வணிகம் மற்றும் நுகர்வோர் நம்பிக்கையை மீண்டும் பெற உதவும் பட்ஜெட்டை முன்வைப்பதே மோடி அரசின், முன் நிற்கும், மூன்று முக்கிய சவால்கள் என்று கர்மா கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவனர் நந்திதா பார்க்கர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி, தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு, நந்திதா பார்க்கர் அளித்துள்ள பேட்டியில் இத்கவல்களை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதை பாருங்கள்: வளர்ந்து வரும் நிலையில், மார்க்கெட்டை ஈர்ப்பதில், இந்தியா முதலிடத்தில் இருந்தது. இன்று அது தொலைதூர நிலை போல் தோன்றினாலும், அந்த முதலிடத்தை மீண்டும் பெறுவதற்கு அரசு நினைத்தால், நிறைய செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்,
வரி விதிப்பு
வரிவிதிப்பு, ஒழுங்குமுறை, அதிக கட்டுப்பாடு, மைக்ரோ மேனேஜ்மென்ட் பற்றிய பிரச்சினைகளை தவிர, வணிகர்களுக்கு, செலுத்த வேண்டிய நிலுவைகளை செலுத்த வேண்டும். மத்திய அரசு மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளை, செலுத்த வேண்டும். மேலும் மாநில அரசுகள், விற்பனையாளர்கள், சப்ளையர்கள், ஒப்பந்தக்காரர்கள் ஆகியோருக்கு நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும்.
மூலதன ஆதாய வரி
முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, வெளிநாட்டு மூலதன முதலீடுகளுக்கு இது ஒரு தடையாக செயல்படுவதால் நீண்டகால மூலதன ஆதாய வரியை நீக்க வேண்டும். இது உலக விதிமுறைகளுக்கு ஏற்ப இந்தியாவை கொண்டு வரும்.
புது வேலைவாய்ப்புகள்
இரண்டாவது பெரிய விஷயம் என்னவென்றால், வெளிநாட்டு நிதிகளை இந்தியாவுக்கு நகர்த்துவதற்கும், இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கும் அனுமதிப்பதாகும். 100,000 புதிய வேலைவாய்ப்புகளை இது உருவாக்கும். அரசாங்கத்திற்கு பில்லியன் கணக்கான டாலர் வரி வருவாயை உருவாக்கவும் உதவும்.
விலை உயர்வு
முந்தைய ஆண்டின் இறுதியில் காணப்பட்ட சிறிய மற்றும் மிட்-கேப் பங்குகளின் மீட்பு இந்த ஆண்டு தொடர்கிறது. இந்த போக்கு ஆண்டு முழுவதும் தொடரும் வாய்ப்புள்ளது. அதிக தொலைத் தொடர்பு கட்டணங்கள் மற்றும் எஃகு தயாரிப்பாளர்களாக பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றின் மூலம் மீட்புகளால் வருவாய் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு நந்திதா பார்க்கர் தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications