டெல்லி: அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்களுடன் பல அறிவிப்புகளை வெளியட்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அந்த வகையில் நாம் தற்போது பார்க்கவிருப்பது, இந்தியாவின் முக்கிய பிரச்சனையான நிதி பற்றாக்குறை பற்றி தான், குறிப்பாக நடப்பு நிதியாண்டில் நிதிபற்றாக்குறை 9.50% ஆகவும், அடுத்த நிதியாண்டில் 6.68% ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக நடப்பு நிதியாண்டில் அரசின் செலவினங்கள் 34.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதே நடப்பு நிதியாண்டில் அரசின் மூலதன செலவு 4.39 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கும்.
இதே அடுத்த 2022ம் நிதியாண்டில் அரசின் செலவினங்கள் 34.83 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக இதனை சமாளிக்க அரசு சந்தைகளில் இருந்து 12 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற முடிவு செய்யதுள்ளதாகவும் தனது பட்ஜெட் அறிக்கையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
உண்மையில் ஒரு நாட்டின் செலவினங்கள் அதிகரிக்கும் போது தான் தேவை அதிகரிக்கும் என்று நாம் முன்னதாக பல கட்டுரைகளில் படித்திருக்கிறோம். ஆக இந்த பட்ஜெட்டில் அரசு தேவையை மீட்டுக் கொண்டு வருவதற்காக செலவினங்களை அதிகரிக்க வேண்டும். இது அரசுக்கு முக்கிய சவலாக இருக்கும் என்றும் கூறியிருந்தோம். இந்த நிலையில் செலவினங்கள் அதிகரிக்க அரசு திட்டமிட்டிருப்பது மிக நல்ல விஷயமே. உண்மையில் இது செலவினங்களை அதிகரிக்கும் போது, இது தேவையை மீட்டுக் கொண்டு வரும். இது பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கும்.
கடந்த ஆண்டில் தான் கொரோனா பாதிப்பின் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் வெகுவாக குறைந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டில் தடுப்பூசிகள் விரைவில் அமலுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் விகிதம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது சிறந்த உதாரணம் ஜனவரி மாத ஜிஎஸ்டி வரி வசூல் விகிதம். ஏனெனில் நடப்பு நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவு உச்சம் தொட்டது தான். ஆக அரசின் இந்த இலக்கு ஒரு புறம் அதிமாக இருந்தாலும், இது வரவிருக்கும் ஆண்டில் குறையும் என்பது நல்ல விஷயம் தானே.