பட்ஜெட் 2021ல் பலவிதமான அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் இந்திய சந்தைகள் கிடு கிடு ஏற்றத்தினை கண்டு வருகின்றன.
சந்தையின் தொடக்கத்திலே ஏற்றத்தில் தொடங்கிய நிலையில், தற்போது சென்செக்ஸ் 2002 புள்ளிகள் அதிகரித்து, 48,292 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 572 புள்ளிகள் அதிகரித்து, 14,206 புள்ளிகள் ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதற்கிடையில் நிஃப்டி, பிஎஸ்இ குறியீடுகளில், பிஎஸ்இ ஹெல்த்கேர் தவிர, மற்றவை அனைத்தும் பச்சை நிறத்திலேயே காணப்படுகிறது. மற்றவை அனைத்தும் பலமான ஏற்றத்திலேயே காணப்படுகிறது.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் இந்தஸிந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பின்செர்வ், ஹிண்டால்கோ, லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே யுபிஎல், டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ், டெக் மகேந்திரா, சிப்லா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸிந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பின்செர்வ், எஸ்பிஐ, லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ், டெக் மகேந்திரா, உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 72.92 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
பட்ஜெட்டில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வந்துள்ள நிலையில், இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் தங்களது முதலீடுகளை தொடர்ந்து வருகின்றனர். இதனால் சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது.