வழக்கமாக பட்ஜெட்டில் ஏதேனும் ஒரு புதுமை என்பது ஒவ்வொரு ஆண்டுமே இருந்து வருகின்றது.
அந்த வகையில் நடப்பு ஆண்டில் யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப் (Union Budget Mobile App) என்ற ஆப்பினை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஆப்பினை கூகுள் பிளே ஸ்டோரிலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
மொபைல் ஆப்
இந்த பட்ஜெட் பேப்பர் இல்லாத மூன்றாவது முறையாக டிஜிட்டல் பார்மேட்டில் உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டில் டிஜிட்டல் பார்மேட்டில் ஆப்பில் பட்ஜெட் ஆவணங்களை எளிதில் அணுக முடியும். பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் செயல்முறை முடிந்த பின்னர், மத்திய பட்ஜெட் 2022 - 23ல் மொபைல் ஆப்பில் கிடைக்கும்.
இணையத்திலும் பர்க்கலாம்
இந்த ஆப் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பார்த்து கொள்ளும் வசதி உள்ளது. நிதியமைச்சகத்தின் அறிக்கையின் படி (https://www.indiabudget.gov.in/) இந்த ஆப்பினை இந்தியா பட்ஜெட் இணையத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த இணையத்திலும் பொதுமக்கள் பட்ஜெட் சம்பந்தமான தகவல்களை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம்.
பிடிஎஃப் பார்மேட்
இந்த பட்ஜெட் ஆப்பில் பட்ஜெட் உரை, வருடாந்திர அறிக்கை, மானியங்களுக்கான கோரிக்கை, நிதி மசோதா போன்ற 14 அம்சங்களை இதில் அணுக முடியும். எனினும் இந்த ஆவணங்கள் வெறும் பிடிஎஃப் (PDF) பார்மேட்டில் மட்டுமே கிடைக்கும்.
சபாநாயகர் ஓம் பிர்லா
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தனது ட்விட்டர் பக்கத்தில், டிஜிட்டல் பார்லிமென்ட் ஆப் பற்றி கூறியுள்ளார். இதுவரை டிவியில் பார்த்து வந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள், டிஜிட்டல் பார்லிமென்ட் ஆப் (Digital sansad app) மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப்பில் அனைத்து பட்ஜெட் விவாதங்களும் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
லைவ் வீடியோ
இந்த ஆப்பில் பார்லிமென்ட்டின் இரு அவைகளின் நடவடிக்கை, அன்றாட அலுவல்கள் பற்றிய தகவல்கள்,அவையில் உறுப்பினர்கள் தாக்கல் செய்யும் எல்லா தகவல்களுக்கும் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். கடந்த 1947 முதல் இப்போது வரையிலான பட்ஜெட் விவாதங்களும் இந்த ஆப்பில் கிடைக்கும். இதன் மூலம் 2022 பட்ஜெட்டினை நேரடியாக பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
அல்வா இல்லை
சில புதுமையான விஷயங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தாலும், பட்ஜெட்டுக்கு முந்தைய பாரம்பரிய நிகழ்வான அல்வா கிண்டுதல் நிகழ்ச்சியானது, இந்த ஆண்டு ஓமிக்ரான் அச்சம் காரணமாக நிறுத்தப்படுள்ளது. இது பட்ஜெட் இறுதி கட்டத்தினை எட்டும் நிலையில், நடத்தப்படும் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்து வந்த நிலையில், நடப்பு ஆண்டில் நிறுத்தப்பட்டுள்ளது.