வரியை அதிகரிக்கலாம்.. பட்ஜெட்டில் கிரிப்டோ வர்த்தகர்களுக்கு காத்திருக்கும் பிரச்சனை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யவிருக்கின்றார்.

இந்த பட்ஜெட்டில் பொதுமக்கள், தொழிலதிபர்கள், வணிகர்காள், நிறுவனங்காள், முதலீட்டாளர்கள் என பல தரப்பினர் இடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

தினசரி ரூ.50 போதும்.. 3 கலக்கலான அஞ்சலக திட்டங்கள்.. எவ்வளவு லாபம் கிடைக்கும்..? தினசரி ரூ.50 போதும்.. 3 கலக்கலான அஞ்சலக திட்டங்கள்.. எவ்வளவு லாபம் கிடைக்கும்..?

பட்ஜெட்டில் வரும் அறிவிப்புகளானது நடப்பு நிதியாண்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட் தாக்கலானது மூன்றாவது அலைக்கும் மத்தியில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மருத்துவ துறையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 கிரிப்டோ குறித்தான அறிவிப்பு

கிரிப்டோ குறித்தான அறிவிப்பு

இதற்கிடையில் ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் கடுமையான நிதி பிரச்சனையில் தத்தளித்து வரும் நிலையில், அரசு வருவாய் விகிதத்தினை அதிகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏற்கனவே கிரிப்டோ கரன்சி தொடர்பான பல கட்டுப்பாடுகள், கிரிப்டோ மசோதா குறித்தான அறிவிப்புகளும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TCS/ TDS விதிக்கப்படலாம்

TCS/ TDS விதிக்கப்படலாம்

குறிப்பாக அரசுக்கு வருவாய் அளிக்கும் விதமாக, கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு TCS/ TDS விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கிரிப்டோகரன்சி வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கிரிப்டோ வர்த்தர்களுக்கு மேற்கொண்டு கூடுதலாக செலவினைக் செய்ய வழி வகுக்கலாம்.

அதிகரிக்கலாம்

அதிகரிக்கலாம்

உலகளவில் அதிக எண்ணிக்கையிலான கிரிப்டோ உரிமையாளர்களைக் கொண்டுள்ளது. தற்போது 10.07 கோடி முதலீட்டாளர்களை கொண்டுள்ளது. தற்போது 2030ல் இந்தியர்களின் கிரிப்டோகரன்சி வணிகமானது 241 மில்லியன் டாலர்களை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு

பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு

ஆக இதற்கிடையில் கிரிப்டோ மசோதாவில் கிரிப்டோகரன்சிகளை முழுமையாக முறைப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுவரையில் இது குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் இது குறித்து பட்ஜெட் தாக்கலில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SFT வரம்பு

SFT வரம்பு

ஆக கிரிப்டோகரன்சி வாங்குதல் மற்றும் விற்பனையானது SFT வரம்பிற்குள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் கிரிப்டோகரன்சி குறித்தாக மசோதா குறித்தான முக்கிய அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வருமான வரி திட்டத்தில் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

budget 2022: govt may mull TDS/TCS levy on cryptocurrency

budget 2022: govt may mull TDS/TCS levy on cryptocurrency/வரியை அதிகரிக்கலாம்.. பட்ஜெட்டில் கிரிப்டோ வர்த்தகர்களுக்கு காத்திருக்கும் பிரச்சனை..!
Story first published: Sunday, January 16, 2022, 20:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X