இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில், பெரியளவிலான அறிவிப்புகள் ஏதும் வரவில்லை எனலாம். குறிப்பாக சாமானிய மக்களுக்கு ஏற்ற அறிவிப்புகள் பெரிதாக எதுவும் வரவில்லை. இது பெரும் ஏமாற்றம் தரும் பட்ஜெட் ஆகவே வந்துள்ளது.
இதற்கிடையில் மாநில அரசு ஊழியர்களுக்கு பலன் தரும் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அது என்ன அறிவிப்பு. இதன் மூலம் ஊழியர்களுக்கு பயன் இருக்குமா? உண்மை நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
மாநில அரசு ஊழியர்களுக்கு சலுகை
மாநில அரசு ஊழியர்களின் என்பிஎஸ் கணக்கில் நிறுவனங்கள் செலுத்தும் பங்கின் மீதான வரி விலக்கு வரம்பை 14% ஆக உயர்த்துவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக 10% ஆக இருந்து வந்தது.
இந்த வரி விலக்கு சலுகையினை 2022- 23ம் ஆண்டில் இருந்து மாநில அரசு ஊழியர்கள் பெற்று கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள்
தற்போதைய நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இந்த சலுகையானது கிடைத்து வருகின்றது. ஆக இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 14% வரி சலுகையினை பெற்று வருகின்றனர். இது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு சமமாக கிடைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். ஆக இந்த அறிவிப்பின் படி, இனி மத்திய மாநில அரசு ஊழியர்கள் என இருவருக்குமே இந்த சலுகை பொருந்தும்.
தனியார் ஊழியர்கள் உண்டா?
இதில் தனியார் துறை ஊழியர்களுக்கு 10% மட்டுமே வரி விலக்கு வரம்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த திட்டத்தில் மூன்று விதமான வரிச்சலுகைகள் கிடைக்கிறது. பிரிவு 80C, வருமான வரி சட்டப்பிரிவு 80CCD ஆகியவற்றின் கீழ் 2 லட்சம் ரூபாய் வரையில் வரி சலுகை உண்டு. இதில் 80Cன் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையிலும், 80CCD (1b)ம் கீழ் 50,000 ரூபாய் வரையிலும் வரிச்சலுகை கிடைக்கிறது. எனினும் இந்த சலுகையானது தனி நபர் ஒருவர் இருந்தால் மட்டுமே கிடைக்கும். அதோடு 80CCDம் கீழ் 50,000 ரூபாய் கிடைக்கும் வரிச்சலுகையானது டயர் 1 கணக்கில் முதலீடு செய்வதன் மூலம் பெற முடியும்.
எப்போது வரி செலுத்தணும்?
2 லட்சம் ரூபாய் வரம்புக்கு மேல் நிறுவனத்தின் எந்தவொரு பங்களிப்பும் வருமான வரி சட்டப்பிரிவு 80CCD (2)இன் கீழ் விலக்கு பெற தகுதியுடையது தான்.
ஒரு நிதியாண்டில் ஒரு ஊழியரின் NPS, superannuation பண்ட் மற்றும் EPF திட்டங்களுக்குச் செலுத்தப்படும் தொகை ஒரு வருடத்திற்கு 7.5 லட்சம் ரூபாயினை தாண்டினால் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications