பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கவும், உற்பத்தியினை ஊக்குவிக்கவும் பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
குறிப்பாக பிஎல்ஐ திட்டம் மூலம் தனியார் முதலீடுகளை ஊக்குவித்து வருகின்றது. இதன் மூலம் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தினையும் செயல்படுத்தி வருகின்றது.
இந்த ஆத்ம நிர்பார் திட்டமானது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதோடு, தொழில் முனைவோரையும் ஊக்குவித்து வருகின்றது.
ஆத்ம நிர்பார் திட்டத்தின் நோக்கம்
கொரோனா பெருந்தொற்றின் மத்தியிலும் இந்திய பொருளாதாரம் விரைவில் மீண்டு வந்துள்ளதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக எனலாம்.
ஆத்ம நிர்பார் திட்டம் என்பது கடந்த 2020ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அறிவித்தது,. இது ஒரு விரிவான தொலை நோக்குடன் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில் நுட்ப தேவைகளை ஊக்குவிப்பதே. இது ஜனநாயகத்தின் வளர்ச்சியையும் ஊக்கப்படுத்த உதவும் .
தற்சார்பு நிலையை எட்ட உதவும்
இந்தியா தற்சார்பு நிலையை எட்டுவதற்கு இந்த திட்டம் மிக உறுதுணையாக இருக்கும். ஆரம்பத்தில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டபோதே தன்னிறைவு பெற்ற இந்தியாவினை உருவாக்க கொண்டு வரப்பட்டது, ஆக அரசின் இந்த திட்டங்கள் வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிப்பதாக அமையும்.
வேலை வாய்ப்புகள் பெருகும்
மேற்கண்ட அரசின் திட்டங்களின் மூலம் தொழிற்துறை வளர்ச்சியானது மேம்படும். இது நிதியமைச்சர் கூறியது போல 60 லட்சம் வேலைகளை மட்டும் அல்ல, வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும்போது இன்னும் வேலை விகிதமானது அதிகரிக்கும். இதன் மூலம் தனி நபர் வருமானம் அதிகரிக்கும். இது மேற்கொண்டு நுகர்வினை அதிகரிக்க உதவு, இதன் மூலம் தேவை அதிகரிக்கும். இது உற்பத்தி விகிதத்தினை ஊக்குவிக்க பயன்படும். மொத்தத்தில் இந்தியாவினை சர்வதேச நாடுகளின் மத்தியில் நிலை நிறுத்த இந்த திட்டங்கள் கைகொடுக்கும்.
எட்டக்கூடிய இலக்கு தான்
குறிப்பாக பிஎல்ஐ திட்டத்தின் மூலம் பல துறைகளை ஊக்குவித்து, தனியார் முதலீடுகளை ஊக்குவித்து வருகின்றது. இதன் மூலம் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டும் அல்ல, வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. ஆக அடுத்த சில ஆண்டுகளில் இந்திய அரசின் வேலை வாய்ப்பு இலக்கானது நிச்சயம் எட்டப்படகூடிய ஒன்றே.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications