பிப்ரவரி 1 ஆம் தேதி அறிவிக்கப்படும் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து அதிகப்படியான எதிர்பார்ப்பும் உள்ளது.
இதற்கு முக்கியமான காரணம் பிரதமர் மோடி தலைமையிலான 2வது ஆட்சியின் கடைசி முழுப் பட்ஜெட் என்பதால் இந்தப் பட்ஜெட் அறிவிப்புகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
இதனால் 2024 ஆம் ஆண்டு நடக்கும் பொதுத்தேர்தலில் பிஜேபி தனது வாங்கு வங்கியை மேம்படுத்த முடியும். இதனால் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் சாமானிய மக்களைக் கவரும் வகையில் அதிகப்படியான அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் 2023 அறிக்கையில் சுங்க வரி அதிகரிப்புக்குச் சாத்தியம் கொண்ட 35 க்கும் மேற்பட்ட பொருட்களின் பட்டியலை மத்திய நிதியமைச்சகம் கையில் எடுத்துள்ளது.
பட்ஜெட் 2023
பட்ஜெட் 2023 அறிக்கை மக்களை ஈர்க்கும் வகையில் ஜனரஞ்சகமாக இருக்கும் எனக் கணிக்கப்படும் இதே வேளையில், கடந்த ஆண்டை போலவே வளர்ச்சி, நிதி இலக்குகளை அடைவது தான் பிரதானமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. இந்த மாறுபட்ட சூழ்நிலைக்கு மத்தியில் மத்திய அரசு தனது வரி வருமானத்தை அதிகரிக்கும் வகையில் சுங்க வரியை அதிகரிக்க முடிவு செய்ய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
35 பொருட்கள்
இப்படி மத்திய அரசு இந்தப் பட்ஜெட் 2023 அறிக்கையில் பிரைவேட் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், நகைகள், high-gloss paper மற்றும் வைட்டமின்கள் எனச் சுமார் 35 பொருட்கள் மத்திய நிதியமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய நிதியமைச்சகம்
டிசம்பர் மாதம் முதல் மத்திய நிதியமைச்சகம் பல்வேறு அமைச்சகங்களுடனான ஆலோசனையில், தத்தம் துறைகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சுங்க வரி உயர்வு குறித்து 35 பொருட்களின் பட்டியலை கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அரசு அதிகாரி தெரிவித்துள்ளதாக எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சுங்க வரி உயர்வு
இந்தச் சுங்க வரி உயர்வு நடவடிக்கை இறக்குமதியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது மற்றும் இந்தப் பட்டியலில் இருக்கும் பல பொருட்களின் தயாரிப்புகளை உள்நாட்டிலேயே செய்ய ஊக்குவிக்கும் முயற்சி தான் இது.
அத்தியாவசியமற்ற பொருட்கள் பட்டியல்
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் டிசம்பர் மாதம் பல்வேறு அமைச்சகங்களைச் சுங்க வரி உயர்த்துவதற்காக வெளிநாட்டில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்யும் அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியலை தயார் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. இந்த இறக்குமதி கட்டண உயர்வு மூலம் இறக்குமதி அளவை கட்டுப்படுத்த முடியும்.
நடப்புக் கணக்குப் பற்றாக்குறை
இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD) செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக உயர்ந்தது மட்டும் அல்லாமல், ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. மேலும் முந்தைய காலாண்டில் இதன் அளவு GDP-யில் 2.2 சதவீதமாக இருந்தது.
விலைவாசி
உலகளாவிய சந்தையில் பல்வேறு கமாடிட்டிகளின் விலையில் ஏற்பட்ட சரிவு, 9 ஆண்டு உயர்வை தொட்டுள்ள, விரிவடைந்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அளவீட்டைத் தணிக்கும். ஆனால் அரசின் கொள்கை வகுப்பாளர்கள் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அளவீட்டைக் கட்டுக்குள் கொண்டு இருக்க வேண்டும் என்பதில் எச்சரிக்கையாக உள்ளனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications