டெல்லி: கொரோனாவின் வருகைக்கு பிறகு இந்திய இளைஞர்கள் இடையே சுயதொழில் செய்வதில் ஆர்வம் கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக விவசாய துறையில் இந்த ஆர்வம் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக விவசாய துறையில் ஸ்டார்ட் அப்களை தொடங்குவோருக்கு சலுகை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இளைஞர்களுக்கு மேற்கொண்டு ஆர்வத்தை தூண்டும் எனலாம்.
அடுத்தகட்டத்திற்கு செல்லும்
மேலும் விவசாய துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல உதவும் எனலாம். குறிப்பாக விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தவும், சர்வதேச அளவில் கொண்டு செல்லவும் பயனுள்ளதாக அமையும்.
இதனால் விவசாயிகளும் பலனடைவார்கள் எனலாம். இது மட்டும் அல்ல இந்த பட்ஜெட்டில் விவசாய துறையை ஊக்குவிக்கும் விதமாக பற்பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
விவசாயிகளுக்கு கடன் இலக்கு
தோட்ட கலைத் துறையை மேம்படுத்த 2200 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது. இதே 20 லட்சம் கொடி ரூபாய் விவசாய கடன் வழங்கவும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு மிக பயனுள்ள ஒன்றாக இருக்கும் எனலாம்.
புதிதாக 10000 உயிரி ஆராய்ச்சி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த வணிக வளாகங்கள்
உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க மாநில தலை நகரங்களில் ஒருங்கிணைந்த வணிக வளாகங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தை படுத்த முக்கிய பங்கு வகிக்கும். இது உற்பத்தி துறைக்கு மட்டும் அல்ல, விவசாய துறைக்கும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்.
இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை
இயற்கை விவசாயத்தின் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனை உருவாக்க 10 ஆயிரம் இடங்களில் உரம் தயாரிப்பு மையம் ஏற்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கொண்டு இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் எனலாம். இது மேற்கொண்டு விவசாயிகளுக்கு ஆர்வத்தினை தூண்டலாம். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பினை பெறலாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications