மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஆறாவது முறையாகவும், 4வது முறையாக இன்றும் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின் போது கடந்த 10 மோடி தலைமையிலான அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட போது உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியா அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்றும் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யும் போது, எங்களுடைய அரசு கொண்டு வந்துள்ள கொள்கைகள் நாட்டில் மதச்சார்பின்மையைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது, ஊழலைக் குறைத்துள்ளது, நெப்போடிசம் தடுப்பதிஸ் அரசு கவனம் செலுத்தியது என மத்திய நிதியமைச்சர் அறிவித்தார்.

அனைவருக்குமான வளர்ச்சியை அளிக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு 2014 ஆம் ஆண்டு ஆட்சியை அமைத்த நாளில் இருந்து சமூக மற்றும் புவியியல் சார்ந்த திட்டங்கள் மூலம் சப்கா சத், சப்கா விகாஸ் வளர்ச்சியை வழங்கினோம்.
உதாரணமாக கரீப், மகிளாயே, யுவா, அன்னதாதா ஆகிய திட்டங்கள் மூலம் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்தி, கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டு வர அரசு திட்டங்கள் உதவியுள்ளது என மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார்.
இந்த 10 வருடத்தில் 7 ஐஐடி, 16 ஐஐஐடி, 7 ஐஐஎம், 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள், 390 பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டுள்ளன, பெண் தொழில்முனைவோருக்கு 30 கோடி முறை கடனுதவி அளிக்கப்பட்டு உள்ளது. முத்ரா கடன் திட்டத்தின் கீன் 43 கோடி இளைஞர்களுக்குத் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்பட்டது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பிஎம் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 3 கோடி பேருக்கு சொந்த வீடு வாங்கும் கனவை நினைவாக்க உதவுவதை நெருங்கியுள்ளோம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அடுத்த 5 வருடத்தில் 2 கோடி வீடுகளுக்குப் பிஎம் ஆவாஸ் யோஜனா திட்டம் விரிவாக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும் 11.8 கோடி விவசாயிகளுக்கு அரசு நலத்திட்டங்கள் பலன்கள் சென்றடைந்துள்ளது என்றும், Rooftop solar திட்டம் மூலம் 1 கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications