மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருவது பல குடும்பங்களை கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளி விடுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மருத்துவக் காப்பீட்டு வசதியை மக்களுக்குக் கிடைக்குமாறு செய்ய மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் மிக முக்கியமானது ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டுத் திட்டம். இத்திட்டத்தின் கீழ், ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கையை அடுத்த 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் இந்த வரம்பிற்குள் கொண்டு வரப்படுவார்கள். மேலும் காப்பீட்டுத் தொகையை ஆண்டுக்கு ரூ. 10 லட்சமாக அதிகரிக்கவும் ஏற்பாடுகள் செய்யப் படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

செய்தி நிறுவனமான PTI-யின் அறிக்கையின்படி, இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், தேசிய சுகாதார ஆணையத்தின் மதிப்பீடுகளின்படி, அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.12,076 கோடி கூடுதல் செலவாகும்.
அடுத்த 3 ஆண்டுகளில் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (AB-PMJAY) திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இது நடைமுறைப்படுத்தப்பட்டால், நாட்டின் மூன்றில், இரண்டு பங்குக்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவக் காப்பீடு கிடைக்கும். மருத்துவச் செலவுகள் தான் குடும்பங்களை கடனில் தள்ளுவதற்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்று என்பதைக் கவனத்தில் கொண்டு இந்த ஆலோசனைகள் நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது AB-PMJAY திட்டத்தின் கீழ், வழங்கப்படும் ரூ.5 லட்சம் காப்பீட்டு வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்துவதற்கான திட்டத்தையும் இறுதி செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த முன்மொழிவுகள், இம்மாத இறுதியில் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஜூன் 27 அன்று நாடாளுமன்றத்தின் கூட்டத்தில் ஆற்றிய உரையில், 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியவர்களும், இப்போது ஆயுஷ்மான் பாரத் யோஜனாவின் கீழ் இலவச சிகிச்சையின் பலனைப் பெற முடியும் என்று கூறியுள்ளார்.
AB-PMJAY திட்டத்திற்கான காப்பீட்டு வரம்பு 2018 ஆம் ஆண்டில் ரூ.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. காப்பீட்டு வரம்பை இரட்டிப்பாக்குவது என்பது பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டும், மாற்று உறுப்பு தானம், புற்றுநோய் போன்ற அதிக செலவு வாய்ந்த சிகிச்சைகளுக்கு குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் காப்பீட்டு வரம்பை உயர்த்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது. இது போன்ற திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டால் சாமானிய மக்களுக்கு மருத்துவமனை செலவுகள் குறையும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications