டெல்லி: மத்திய பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு உயர்த்தப்படும், 80சி பிரிவில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவின. ஆனால் அது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடவில்லை. குறிப்பாக பழைய வரி நடைமுறைக்கு என எந்த சலுகைகளும் அவர் அறிவிக்கவில்லை. புதிய வரி நடைமுறையில் மட்டும் சில மாற்றங்களை அறிவித்திருந்தார்.
இத்தகைய செயல்கள் பழைய வரி நடைமுறையை முற்றிலுமாக கைவிடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறது. இதனிடையே வருமான வரி நடைமுறையை எளிதாக்குவது தான் அரசின் நோக்கம் என தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன் பழைய வரி நடைமுறை முற்றிலுமாக நீக்கப்படுமா என்பது குறித்து தன்னால் தற்போது கூற முடியாது என தெரிவித்துள்ளார். பழைய வரி நடைமுறை தொடர்பாக எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அது முழுமையான ஆய்வுக்கு பின்னரே எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பழைய வரி நடைமுறையை எளிதாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் புதிய வரி நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என்ற விளக்கத்தையும் அவர் தந்துள்ளார். கடந்த 2020 ஆம் நிதியாண்டில் மத்திய அரசு புதிய வரி நடைமுறையை அறிமுகம் செய்தது. பழைய வரி நடைமுறையில் வீட்டு வாடகை, காப்பீடு மற்றும் பல்வேறு முதலீடுகளை நாம் சுட்டிக்காட்டி வரிவிலக்கு பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் புதிய வரி நடைமுறையில் அத்தகைய வரி விலக்குகள் ஏதும் வழங்கப்படுவது கிடையாது ஆனால் வருமான வரி விகிதங்கள் குறைவாக உள்ளன.
தற்போது வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு பழைய வரி நடைமுறை மற்றும் புதிய வரி நடைமுறை என இரண்டு வாய்ப்புகளுமே வழங்கப்படுகின்றன. அரசு வெளியிடக்கூடிய தகவலின் அடிப்படையில் தற்போது பெரும்பாலானவர்கள் புதிய வரி நடைமுறைக்கு மாறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வரி செலுத்தக்கூடிய தனிநபர்களில் மூன்றில் இரண்டு பேர் புதிய வரி நடைமுறைக்கு மாறியுள்ளனர் என அரசு கூறுகிறது. அதாவது 8.61 கோடி வருமான வரி கணக்குகள் புதிய வரி நடைமுறையின் கீழ் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக அரசு தெரிவிக்கிறது.
அரசும் மக்கள் புதிய வரி நடைமுறைக்கு மாற வேண்டும் என தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் பட்ஜெட்டில் புதிய வரி நடைமுறையில் தான் பல்வேறு மாற்றங்களை நிர்மலா சீதாராமன் கொண்டு வந்துள்ளார். இதில் வழங்கப்படும் நிலையான வரி தள்ளுபடி என்பது 50,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வரி அடுக்குகளிலும் அவர் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். புதிய மாற்றங்கள் மூலம் ஊதியம் பெறக்கூடிய தனிநபர்கள் புதிய வரி நடைமுறையில் 17500 ரூபாய் வரை வரியை மிச்சப்படுத்த முடியும்.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications