பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக அட்சி அமைந்திருக்கும் வேளையில் 2025ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் அறிக்கையை ஜூலை 24 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்ஜெட்டி குறித்துப் பல எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் உள்ளது.
இதில் மிகவும் முக்கியமானதாக விளங்குவது பிஎப் எனப்படும் வருங்கால வைப்பு நிதிக்கான லிமிட்-ஐ அதிகரிப்பது குறித்துத் தான்.

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் 2024 அறிக்கையில் மாத சம்பளக்காரர்களின் வருங்கால வைப்பு நிதியத்திற்கான (Provident Fund - PF) சம்பள உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, வருங்கால வைப்பு நிதிக்கான சம்பள உச்சவரம்பு ரூ.15,000 ஆக இருக்கும் நிலையில், இதை கடைசியாக 2014ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி இந்த வரம்பு திருத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சம்பள உச்சவரம்பை 25000 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பள உச்சவரம்பை ரூ.25,000 ஆக உயர்த்துவதற்கான கோரிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை தயார் செய்துள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் சேமிப்பும் அதிகரிக்கும்.
வருங்கால வைப்பு நிதி விதிகளின்படி, பணியாளரின் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி (Dearness Allowance) அல்லது வேறு கொடுப்பனவு ஆகியவற்றைக் கொண்டு பிஎப் கணக்கிற்கான பங்களிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. ஊழியர்களின் சம்பளத்தில் கழிக்கப்படும் தொகை அனைத்தும் பி.எஃப் கணக்கிற்கு (PF Account) செல்லும். இதில் தொழிலாளர் மற்றும் நிறுவனம் தரப்பில் தலா 12% பங்களிப்பு செய்ய வேண்டும்.
ஊழியரின் முழு பங்களிப்பும் வருங்கால வைப்பு நிதி கணக்கிற்குச் செலுத்தப்படுகிறது. நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33% பகுதி ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (Employee Pension Scheme - EPS), மீதமுள்ள 3.67% பகுதி வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கும் செலுத்தப்படுகிறது.
இப்படி பிஎப் கணக்கிற்குச் செலுத்தப்படும் தொகை மாதத்திற்கு அதிகப்படியாக 15000 ரூபாய் மட்டுமே செலுத்த முடியும். இந்த அளவீட்டை 25000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
தற்போது EPF திட்டத்தின் கீழ், கட்டாய பங்களிப்பு செய்ய வேண்டிய சம்பள உச்சவரம்பு மாதம் ரூ.15,000/- ஆக உள்ளது. இதன் அர்த்தம், இதைவிட அதிக சம்பளம் பெறுபவர்கள் விருப்பப்பட்டால் கூடுதலாகத் தானாக முன் வந்து இத்தொகையை முதலீடு செய்யலாம்.
ஆனாலும் கட்டாய பங்களிப்பு ரூ.15,000/- என்ற அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படும். அதாவது ஊழியர்கள் VPF திட்டத்தின் மூலம் கூடுதலாக முதலீடு செய்தாலும் 12% ஐ விட அதிகமாக முதலாளி பங்களிப்பு செய்ய அவசியமில்லை.
இந்த 15000 ரூபாய் சம்பள உச்சவரம்பு கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி திருத்தப்பட்டது. ரூ.15,000/- என்ற தொகை 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு போதுமானதாக இல்லை என்பதால் பல நிபுணர்களும் தொழிற்சங்கங்களும் இந்த சம்பள உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
எனவே தான், 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்த சம்பள உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் இது உயர்த்தப்பட்டால் கையில் கிடைக்கும் சம்பளத்தில் கணிசமான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications