பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் வைக்க உள்கட்டமைப்புத் துறை உட்பட முக்கியமான துறைகளில் அதிகப்படியான மூலதனத்தைச் செலுத்த முன்னுரிமை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு நடப்பு நிதியாண்டுக்கு மூலதனச் செலவினத்திற்குச் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் என்ற பெரும் தொகையை எப்போதும் இல்லாமல் அதிகப்படியான தொகையை ஒதுக்கீடு செய்தது.

இதன் தொடர்ச்சியாக இந்தப் பட்ஜெட் திட்டத்திலும் பொருளாதாரத்தில் பல மடங்கு வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டிருப்பதால் இதைப் பயன்படுத்திக்கொள்ளவும், தனியார் முதலீட்டை ஈர்க்கும் வகையில், மூலதனச் செலவினங்களுக்காக அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் எதிர்பார்ப்புகள்: வரவிருக்கும் பட்ஜெட்டில், பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்காக, குறிப்பாக உள்கட்டமைப்புத் துறையில், மூலதனச் செலவினங்களை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, PTI தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கோவிட்-19க்குப் பிந்தைய பட்ஜெட்டுகளில் மூலதனச் செலவினங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது, இது பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவியது. கடந்த மூன்று ஆண்டுகளில் உலகில் பிற பெரிய பொருளாதார நாடுகளைக் காட்டிலும் அதிகமாக இந்தியா 7 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது.
பிடிஐ அறிக்கையின்படி, மத்திய அரசு மூலதனச் செலவினங்களுக்கு 2020-21ல் ரூ.4.39 லட்சம் கோடி, அடுத்த ஆண்டில் 35 சதவீதம் அதிகரித்து ரூ.5.54 லட்சம் கோடி, மேலும் 2022-23ல் 35 சதவீதம் அதிகரித்து ரூ.7.5 லட்சம் கோடியை எட்டியது. 2023-24ல் இது 37.4 சதவீதம் அதிகரித்து, 10 லட்சம் கோடி ரூபாயை எட்டியது.
இந்த அளவீடு தொடர்ந்தால் மத்திய அரசு 2024-25 ஆம் நிதியாண்டில் 13 முதல் 14 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்ய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் சந்தை கணிப்பின் படி இந்த ஆண்டு 10.2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்யும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications