2024-25 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று இடைக்காலப் பட்ஜெட்டாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெறும் 57 நிமிடத்தில் புதிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக தாக்கல் செய்தார்.
புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டும், முதல் நிதியமைச்சர் என்ற வரலாற்று பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

இந்தப் பட்ஜெட்டில் வருமான வரியில் எவ்விதமான மாற்றத்தை அறிவிக்காதது சாமானிய மக்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், சில அறிவிப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானதாகவும், நீண்ட கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் 2024-25 ஆம் நிதியாண்டுக்கு நாட்டின் மொத்த மூலதன செலவின அளவு கடந்த ஆண்டை காட்டிலும் 11.1 சதவீதம் அதிகரித்து 11.11 லட்சம் கோடி ரூபாயாக அறிவிக்கப்பட்டதை பலரும் பாராட்டி வரும் வேளையில், பலரும் கவனிக்க மறந்த ஒரு விஷயம் R&D.
உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் அனைத்தும் ஆராய்ச்சியில் அதிகப்படியான நேரத்தையும், பணத்தையும் முதலீடு செய்யும் வேளையில், இந்தியா பல வருடங்களாக இதில் பின்தங்கி வந்தது.
இந்த நிலையில் இந்தியா உலகின் டாப் 5 பொருளாதார நாடுகள் பட்டியலுக்குள் வந்த பின்பு, R&D, இன்னோவேஷன் பிரிவில் அதிகம் முதலீடு செய்ய வேண்டியது கட்டாயம், இதன் வாயிலாகத் தான் நாட்டின் வளர்ச்சியை நீண்ட காலத்திற்கு நிலைநட்ட முடியும் என்பதை மோடி அரசு உணர்ந்துள்ளது.
இதன் அடிப்படையில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் நிதியை R&D துறையில் சன்ரைஸ் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்வதாகத் தெரிவித்துள்ளது.
50 ஆண்டு வட்டியில்லா கடனை தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட வளர்ச்சிக்காகச் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்வதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த நிதியை வைத்து நீண்ட காலத் தவணைகள் மற்றும் குறைந்த அல்லது பூஜ்ய வட்டி விகிதங்களுடன் நீண்ட கால நிதியுதவியை அரசு வழங்கும். இது அரசு நிர்ணயம் செய்துள்ள சன்ரைஸ் துறையில் செய்யப்படும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை அதிகரிக்கத் தனியார் துறைக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications