டெல்லி: 2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பின் வரக்கூடிய ஐந்து அறிவிப்புகள் வரவேண்டும் என நாடு முழுவதும் பரவலாக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வரி விகிதங்களில் மாற்றம்: இந்தியாவில் தனிநபர்களுக்கான வருமான வரி விகிதங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வருகிறது. ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கான வருமான வரி விகிதங்களை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவில் பணவீக்க விகிதம் அதிகரித்து வருவதால் அரசு வருமான வரி விகிதங்களில் மாற்றங்களை கொண்டு வந்தால் மட்டுமே நுகர்வு போக்கு அதிகரிக்கும் இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தக்க வைக்கும் என FICCI துணைத்தலைவர் விஜய் சங்கர் கூறியுள்ளார்.

எரிபொருளுக்கான வரியை குறைப்பது: இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் மீது விரிக்கப்படக்கூடிய கலால் வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் இந்தியாவின் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்படவில்லை. சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய செலவாகவும் பல பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகவும் இருக்க கூடிய பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கபடுகிறது.
துறை சார்ந்த தொழில் ஊக்குவிப்பு: சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில்களில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும், உற்பத்தி துறையில் முதலீட்டை உயர்த்தி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்காக அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்ட துறைகளில் இயங்கும் நிறுவனங்களை இலக்காக வைத்து கொள்கைகளை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்படுகிறது.
கிராமப்புறங்களில் கவனம் தேவை: கிராமப்புறங்களில் நுகர்வு போக்கு குறைந்து வருவது நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என கூறும் தொழில்துறை கூட்டமைப்பின் இயக்குனர் சந்திரதீப் பானர்ஜி அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 267 ரூபாயிலிருந்து 375 ரூபாயாக உயர்த்த வேண்டும் , விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கி வரக்கூடிய 6000 ரூபாயை 8000 ரூபாயாக உயர்த்த வேண்டும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு பிரத்தியேக சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.
சீனாவின் செயல்பாடுகளால் கவலை: சீனா அதிகளவிலான பொருட்களை தயாரித்து உலகளவில் ஏற்றுமதி செய்வது இந்திய தொழில்களை பாதிக்கிறது. எனவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகங்களை பாதுகாக்கவும், நியாயமான தொழில் போட்டியை ஊக்குவிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Story Written By: Devika
More From GoodReturns

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications