பிப்ரவரி 1 ஆம் தேதியான இன்று மத்திய அரசு யூனியன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. அதனை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது முறையாக தாக்கல் செய்கிறார். நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் இந்த பட்ஜெட்டில் விவசாய துறைக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கிசான் கிரெடிட் கார்டு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய நல்ல செய்தியாக அமைந்துள்ளது. அதாவது விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் விதமாக கிசான் கிரெடிட் கார்டு கடனுக்கான வரம்பு அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக கடன் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான கிசான் கிரெடிட் கார்டு வரம்பு அதிகரிப்பை அரசு இப்போது நிறைவேற்றியுள்ளது.

விவசாயிகளுக்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் கிசான் கிரெடிட் கார்டு திட்டம். இதன் மூலம் விவசாயிகள் குறைந்த வட்டியில் கடன் பெறுவதுடன், அவர்கள் பெறும் வருமானமும் அதிகரிக்கும்.
1998 இல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் குறுகிய கால பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. 9% வட்டி விகிதத்தில் விவசாயிகள் இந்த கடனை பெறலாம். அத்துடன் வட்டியில் அரசு 2 சதவிகிதம் மானியமும் தருகிறது. கடனை உரிய காலத்தில் திருப்பியளிக்கும் விவசாயிகளுக்கு 3% கூடுதல் சலுகையும் உண்டு.
இதன்மூலம் வெறும் 4% வட்டியில் விவசாயிகள் கடன் பெறலாம். விவசாயிகள் மட்டுமின்றி கால்நடை, மீன் வளர்ப்பு போன்ற தொழில்களை செய்து வருபவர்களும் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் கடனுதவி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications