மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதியன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். எதிர்வரும் பட்ஜெட்டில் தங்களது தேவையான சலுகைகளை பல்வேறு துறையினரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
அதேபோல், வரி செலுத்தும் சாமானிய மக்களும் சில சலுகைகளை மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக 6 சலுகைகளை மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கின்றனர்.

அடிப்படை வரி விலக்கு வரம்பு: வரி செலுத்துவோர் புதிய வரி விதிப்பு முறைக்கு மாறுவதற்கு அரசாங்கம் அதிக உந்துதல் அளித்து வருவதால், பழைய வரி விதிப்பு முறையில் எந்த மாற்றங்களும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது புதிய வரி விதிப்பின் கீழ் அடிப்படை வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உள்ளது. இந்த அடிப்படை வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படலாம். இது தனிநபர்கள் செலவழிக்க அல்லது சேமிக்க அதிக செலவழிப்பு வருமானத்தை வழங்கும். இதன் மூலம் ஒட்டு மொத்த பொருளாதாரமும் உயரும்.
வீட்டுவசதி துறை: அனைவருக்கும் வீடு மற்றும் வீட்டு உரிமையை ஊக்குவிப்பது போன்ற அரசாங்கத்தின் நோக்கத்திற்கு இணங்க, புதிய வரி விதிப்பின்கீழ், சொந்தமாக வசிப்பதற்காக எடுத்துள்ள வீட்டுக் கடன்களுக்கான வட்டிக்கு விலக்குகளை அளிப்பது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
வரி விலக்கு: புதிய வரி விதிப்பின் கீழ் தற்போது ரூ.7 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது. மத்திய பட்ஜெட்டில் இந்த வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிஜமானால், நடுத்தர வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் மற்றும் அவர்களின் நிதியை நிர்வகிப்பதை எளிதாக்கும்.
நிலையான கழிவு அதிகரிப்பு: சம்பளதார வரி செலுத்துவோரை பாதுகாக்க, புதிய வரி விதிப்பின்கீழ், வழங்கப்படும் வருமான வரி நிலையான கழிவு ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரூ.75,000 நிலையான விலக்கு அளிக்கப்படுகிறது.
நிலையான கழிவு அதிகரிப்பட்டால், பணவீக்கத்தை எதிர்த்து போராடவும், வீட்டிலிருந்து வேலை செய்தல், கலப்பின வேலை மற்றும் எங்கிருந்தும் வேலை செய்தல் போன்ற பணி கலாச்சாரத்தில் ஏற்படும் மாற்றங்களால் எழும் தனிப்பட்ட செலவுகளை சமாளிக்க முடியும்.
மின்சார வாகனங்களுக்கு வரி சலுகை: கார்பன் உமிழ்வை குறைக்க, பசுமை ஆற்றலை நோக்கி நகர, பிரிவு 80இஇபி-ன் கீழ், (மின்சாரம் வாகனம் வாங்குவதற்காக வாங்கிய கடனுக்கான வட்டிக்கான விலக்கு) விலக்கை மீண்டும் அமல்படுத்தி, புதிய வரி விதிப்புக்கும் நீட்டிக்க வேண்டும்.
சொத்து விற்பனை: சொத்தை விற்பனை செய்பவர் வெளிநாட்டில் வாழும் நபராக (என்ஆர்) இருந்தால், அந்த சொத்தை வாங்குபவர் இந்த ஒரு முறை பரிவர்த்தனைக்கு TAN பெற வேண்டும், அதிக விகிதத்தில் வரியை கழித்து, டிடிஎஸ் ரிட்டனை தாக்கல் செய்ய வேண்டும்.
இது ஒரு சிக்கலான செயல்முறையாகும். எனவே இதனை எளிதாக்க, வெளிநாட்டில் வாழும் விற்பனையாளர்களுக்கு உள்நாட்டவர்கள் போன்ற சலான் கம் ஸ்டேட்மென்ட்டை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
Story written by: Subramanian
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

கேரளா சம்ருதி லாட்டரி முடிவு: ரூ.1 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார்? பரிசுத் தொகையை பெறுவது எப்படி?



Click it and Unblock the Notifications