மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்வரும் 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்த சூழ்நிலையில், எதிர்வரும் பட்ஜெட்டில் எந்தெந்த பொருட்களுக்கு வரி உயர்த்தவும், எந்த பொருட்களுக்கு வரி குறைக்கப்படவும் வாய்ப்புள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதன்படி, வாஷிங் மெஷின், டிஷ் வாஷர் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் மருத்துவ கருவிகளின் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டும், இறக்குமதியை குறைக்கும் நோக்கிலும் எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில், நுகர்வோர் மின்னணு சாதனங்கள் முதல் மருத்துவ கருவிகள் வரையிலான இறக்குமதி செய்யப்படும் முழுமையாக தயாரிக்கப்பட்ட சாதனங்கள் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தும் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்த பொருட்களின் விலை உயரும். வாஷிங் மெஷின், டிஷ் வாஷர் போன்ற மின்னணு சாதனங்கள் விலை அதிகரிக்கும். தற்சமயம் இறக்குமதியாகும் வாஷிங்மெஷின் போன்ற மின்னணு சாதனங்களுக்கு அடிப்படை வரி 10 சதவீதமாக உள்ளது.
இறக்குமதி செய்யப்படும் மருத்துவ கருவிகள் மீதான வரி மத்திய பட்ஜெட்டில் உயர்த்தப்படும் என தெரிகிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் குறிப்பாக வியட்நாமில் இருந்து வரும் பிபி மெஷின், ஆக்ஸிமேட் போன்ற மருத்துவ கருவிகளின் விலை உயரக்கூடும்.
நுகர்வோர் மின்னணு சாதனங்கள் மற்றும் மருத்துவ கருவிகள் மீதான இறக்குமதி வரியை உயர்த்தும் அதேவேளையில், மானுபாக்சரிங் கருவிகளில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைக்க வாய்ப்புள்ளது.
இதனால் இந்த உதிரிபாகங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. உள்நாட்டு தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும், அவர்களின் ஏற்றுமதி போட்டி திறனை அதிகரிப்பதற்காகவும் இந்த உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைக்க திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பலன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இறக்குமதி வரி எவ்வளவு குறைக்கப்படும் என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை.
Story written by: Subramanian
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications