மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளான 2025 பிப்ரவரி 1 ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் அந்நாளில் பங்குச்சந்தை மூடப்பட்டு இருக்கும், இதன் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு ஏற்ப முதலீடு செய்ய முடியாதென மக்கள் புலம்பி வந்த நிலையில் இன்று பங்குச்சந்தைகள் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் 2025 பிப்ரவரி 1 ஆம் தேதியன்று பங்குச் சந்தைகள் வர்த்தகத்திற்காகத் திறந்திருக்கும் என்று தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் மும்பை பங்குச் சந்தை (BSE) அறிவித்துள்ளன. இதுதான் முதல் முறை என்றால் இல்லை, 2020 மற்றும் 2015 ஆம் ஆண்டு பட்ஜெட்டுகளுக்கும் இதே போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பிப்ரவரி 1 ஆம் தேதி முழுமையான வர்த்தக நாளாக இருக்கும், பங்குச்சந்தைகள் முதல் அனைத்து பிரிவுகளும் முழு நேரம் இயங்கும் என மும்பை பங்குச்சந்தை தளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. பங்குச் சந்தைகள் காலை 9:15 மணி முதல் மாலை 3:30 மணி வரை இயங்கும், ஆனால் அந்த நாளில் "T0" அடிப்படையில் பரிவர்த்தனை நடக்காது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 பிப்ரவரி 1 ஆம் தேதி தனது எட்டாவது தொடர்ச்சியான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த ஆண்டு நிதி அறிக்கையில், அடுத்த நிதியாண்டிற்கான அரசின் செலவினங்கள் மற்றும் வருவாய் இலக்குகள் ஆகியவை அறிவிக்கப்படும்.
இதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய நிதித் திட்டங்கள், கொள்கைகள் மற்றும் முயற்சிகளை மத்திய அரசு வெளியிட உள்ளது.
மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் பங்குச்சந்தையில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட் தினத்தன்று சந்தைகள் திறந்திருப்பதன் மூலம், அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் பல்வேறு துறைகள் மற்றும் தொழில்கள் மீதான அறிவிப்புகளின் தாக்கம் தொடர்பாக முதலீட்டாளர்கள் உடனடியாக செயல்பட முடியும்.
நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரத் துறை, மத்திய பட்ஜெட் ஆவணங்களைத் தயாரிக்கும் பணியை மேற்கொள்கிறது. விரிவான பகுப்பாய்வு மற்றும் பல்வேறு அமைப்புகள், பிரிவுகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு இந்த பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்பட்டுத் தாக்கல் செய்யப்படுகிறது.
More From GoodReturns

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications