இந்தியா தனக்கு தேவையான வெள்ளியில் 80 சதவீதத்தை வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. எனவேதான் சர்வதேச அளவில் வெள்ளியின் விலையில் ஏற்படக்கூடிய எந்த ஒரு தாக்கமும் இந்திய சந்தையிலும் எதிரொலிக்கிறது. உலக சந்தையில் வெள்ளி விலை உயர்ந்தால் இந்தியாவில் வெள்ளி விலை உயரும், உலக சந்தையில் சரிந்தால் இந்தியாவில் வெள்ளி விலை சரியும்.
ஆனால் தங்கத்தை போலவே வெள்ளியை டீல் செய்து விட முடியாது. ஏனெனில் தங்கம் நாம் ஆபரணமாகவும் நமக்கான சொத்தாக கட்டிகளாகவும் நாணயங்களாகவும் வாங்கி வைத்து கொள்வோம். வெள்ளியை நாம் ஆபரணமாக மட்டுமில்லாமல் தொழில்துறை ரீதியாகவும் பயன்படுத்துகிறோம். எனவே வெள்ளி தொடர்பாக மத்திய அரசு எடுக்கக்கூடிய எந்த ஒரு முடிவும் சாமானிய மக்களை மட்டும் அல்ல பல்வேறு தொழில் துறையினரையும் பாதிக்கும். எனவே மிக கவனமாக தான் வெள்ளி விஷயத்தில் அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடும்.

இந்தியா தற்போது சோலார் பேனல் உற்பத்தி, மின்சார வாகன உற்பத்தி, மின்னணு சாதன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்துகிறது. இவை அனைத்திற்குமே மிக முக்கிய உபகரணமாக வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. எனவே தான் வெள்ளி தொடர்பாக எடுக்கப்படக்கூடிய எந்த ஒரு கொள்கை மாற்றமும் தொழில்துறை ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நிதி அமைச்சர் வெள்ளிக்கான இறக்குமதி வரியை குறைக்கிறார் எனும் போது உள்நாட்டில் வெள்ளியின் விலை குறையும். இதனால் வெள்ளியை நகையாகவும் முதலீடு நோக்கத்திலும் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும. தொழில்துறை ரீதியாக ஒரு உபகரணமாக வெள்ளியை வாங்கக்கூடிய உற்பத்தியாளர்களுக்கு இது மிகப்பெரிய ஒரு சாதகமான அறிவிப்பாக இருக்கும்.முன்பை விட குறைந்த விலைக்கு வெள்ளியை அவர்கள் இறக்குமதி செய்து பல்வேறு பொருட்களுக்கான உபகரணமாக மாற்றி பயன்படுத்த முடியும்.
ஒரு வேளை வெள்ளிக்கான இறக்குமதி வரியை உயர்த்தினால் உள்நாட்டில் வெள்ளியின் விலை உயரும். வெள்ளி நகை , நாணயம், வெள்ளிக்கட்டி என மட்டும் இல்லாமல் தொழில்துறை ரீதியாக இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சிறு உற்பத்தியாளர்கள் அதிக விலைக்கு வெள்ளியை இறக்குமதி செய்ய முடியாமல் தவிக்கும் நிலை உண்டாகும்.
எனவேதான் வெள்ளிக்கான இறக்குமதி வரி மட்டுமில்லாமல் அதற்கான ஜிஎஸ்டி நிவாரணத்தையும் அளிக்க வேண்டும் என பல்வேறு துறை சார்ந்த உற்பத்தியாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர். மத்திய அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் அதிக கவனம் செலுத்துகிறது. ஏனெனில் இந்தியா தன்னுடைய கார்பன் வெளியிட்டு அளவை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
எனவே இது சார்ந்த துறைகளை ஊக்குவிக்கும் திட்டங்களில் அரசு கவனம் செலுத்துகிறது. சோலார் உற்பத்தி, மின்சார வாகன உற்பத்தி, மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் என அனைத்திலுமே வெள்ளி மிக முக்கியமான ஒரு பாகம். எனவே அரசு தொழில்துறைக்கு வெள்ளியை இறக்குமதி செய்பவர்களுக்கு தனி நிவாரணம் அறிவிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு அறிவித்தால் இந்தியாவில் சோலார் பேனல் உற்பத்தியும் மின்சார வாகன உற்பத்தி மற்றும் பல்வேறு மின்னணு சாதன உற்பத்திக்கு பெரிய ஊக்குவிப்பாக அமையும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம், வெள்ளி விலை 3-8% சரியும் அபாயம்.. ஈரான் - அமெரிக்கா போருக்கு மத்தியில் திடீர் திருப்பம்..!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

10 கிராம் தங்கம் 2 லட்சம் வரை உயர வாய்ப்பு..! தங்கம் $6000, வெள்ளி $100 எட்டுமா?

தங்கம் விலை தடாலடியாக ரூ.6000 உயர்வு.. MCX சந்தையில் நடப்பது என்ன..?

பதறும் மத்திய கிழக்கு நாடுகள்.. எகிறும் தங்கம், வெள்ளி விலை! இனி என்னவாகும்?



Click it and Unblock the Notifications