தொடர்ந்து அதிகரிக்கும் மருத்துவ செலவுகள்: மத்திய பட்ஜெட்டிலாவது நிவாரணம் கிடைக்குமா?

2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நெருங்குவதால், இந்தியாவில் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் மற்றும் மருத்துவ சிகிச்சைச் செலவுகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை கொண்டுவர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவின் மருத்துவப் பணவீக்கம் உலகிலேயே அதிகமானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் முக்கிய அறுவை சிகிச்சைகளின் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. பாலிசிபஜார் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, புற்றுநோய் சிகிச்சை 2020 இல் ரூ 30.1 லட்சமாக இருந்தது 2024 இல் ரூ 50.8 லட்சமாக உயர்ந்துள்ளது. இதேபோல், இருதய மாற்று அறுவை சிகிச்சை ரூ20.5 லட்சத்திலிருந்து ரூ34 லட்சமாகவும், கல்லீரல் சிரோசிஸ் சிகிச்சை ரூ14.7 லட்சத்திலிருந்து ரூ24.3 லட்சமாகவும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ₹ரூ10.8 லட்சத்திலிருந்து ரூ18.2 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் மருத்துவ செலவுகள்: மத்திய பட்ஜெட்டிலாவது நிவாரணம் கிடைக்குமா?

மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான கட்டணங்கள், மேம்பட்ட நோயறிதல்கள், மருத்துவ சாதனங்கள் மற்றும் புதிய சிகிச்சைகள் ஆகியவை ஆண்டுதோறும் சிகிச்சை பில்களை அதிகரித்து வருகின்றன, என்று ப்ரோபஸ் நிறுவனத்தின் இயக்குநர் ராகேஷ் கோயல் கூறுகிறார். இந்தியாவின் மருத்துவப் பணவீக்க விகிதம் ஆண்டுக்கு 12-15% ஆகும். இது ஆசியாவிலேயே அதிகபட்சமான ஒன்றாகும், இது செலவுக்கும், காப்பீட்டுக்கும் இடையே பெரிய இடைவெளியை உருவாக்குகிறது.

IRDAI தகவல்படி, இந்தியாவில் சுகாதாரக் காப்பீட்டு பாதுகாப்பு 2014-15 இல் 288 மில்லியன் நபர்களிடமிருந்து 2023-24 இல் சுமார் 573 மில்லியன் பேராக கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. இருப்பினும், மொத்த மக்கள் தொகையில் காப்பீட்டு வசதி வெறும் 40-42% ஆக மட்டுமே உள்ளது.

இதனால், அதிக எண்ணிக்கையிலான குடும்பங்களுக்குப் போதுமான சுகாதாரக் காப்பீடு இல்லை. "இந்தியாவில் மருத்துவப் பணவீக்கம் உலகிலேயே அதிகமானது. குறிப்பிடத்தக்க, சரியான நேரத்தில் மற்றும் ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை தலையீடுகள் இல்லாமல், இந்த போக்கு தொடரவே வாய்ப்புள்ளது," என்று டெலாய்ட் இந்தியாவின் தேபாசிஷ் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

உயர் சிகிச்சைக்கான செலவுகள், விலையுயர்ந்த மருத்துவத் தொழில்நுட்பங்கள், விரிவான சிகிச்சை நெறிமுறைகள் மற்றும் மருத்துவமனை செலவுகளில் உள்ள முரண்பாடுகள் ஆகியவற்றால் பலரின் வருமானத்தை விட மருத்துவமனை பில்கள் வேகமாக உயர்கின்றன. 2026 பட்ஜெட்டில் மருத்துவமனை அறைக் கட்டணங்களுக்கான ஜிஎஸ்டியை நீக்குவது, அதிகரித்து வரும் மருத்துவமனைச் செலவுகளிலிருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய ரூ 5,000 ஒரு நாள் வரம்பு மிகக் குறைவு. இது இன்றைய சுகாதாரத் தேவைகளைப் பிரதிபலிக்கவில்லை. குறிப்பாக நகர்ப்புறங்களில், சாதாரண தனியார் அறைகளின் கட்டணம் கூட இதைவிட அதிகம். இதன் விளைவாக, நோயாளிகள் அடிப்படை மருத்துவமனைத் தேவைகளுக்காகவும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டியுள்ளது என்று பாலிசிபஜார் பொதுக் காப்பீட்டின் CBO அமித் சப்ரா கூறுகிறார்.

பில்லிங் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், நோயாளிகள் தேவையான பராமரிப்பிற்காக பணம் செலுத்துகிறார்களா அல்லது அதிகப்படியான செலவினங்களுக்காக பணம் செலுத்துகிறார்களா என்பதைக் குறித்த சந்தேகம் எழுகிறது. மருத்துவப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த முரண்பாடுகளைச் சரிசெய்வது மிகவும் முக்கியம்.

"செலவுகளைக் கட்டுப்படுத்த, நிலையான பில்லிங் நடைமுறைகளை வகுப்பது மற்றும் குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் நடைமுறைகளுக்கான விலைகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட வழிகளை ஆராய, அரசு மருத்துவமனைகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும்," என்று பானர்ஜி வலியுறுத்துகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+