2027 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக மத்திய அமைச்சர்களின் சம்பளத்திற்காகவும், பிரதமர் அலுவலகம் மற்றும் இந்தியாவிற்கு வருகை தரக்கூடிய விருந்தினர்களுக்காக செலவிடுவதற்காகவும் அரசு எவ்வளவு தொகையை ஒதுக்கி இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு இருக்கும் தகவலின் படி மத்திய அமைச்சர்களின் சம்பளத்திற்காகவும் மற்ற செலவினங்களுக்காகவும் எதிர் வரக்கூடிய நிதி ஆண்டுக்கு 620 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது 2025-26 ஆம் நிதி ஆண்டில் 483.54 கோடியாக இருந்தது. அதாவது முந்தைய பட்ஜெட்டை விட தற்போது மத்திய அமைச்சர்களின் சம்பளம் மற்றும் செலவினங்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் பிற அலோவென்சுகளுக்கும், இணை அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பிரதமர்கள் ஆகியோருக்கான செலவினங்களும் அடங்கும். அடுத்ததாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்திற்கு 256.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது இது முந்தைய ஆண்டு 279.74 கோடியாக இருந்து. இப்போது குறைக்கப்பட்டு இருக்கிறது.
அடுத்ததாக அமைச்சரவை செயலகத்திற்காக 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது முந்தைய நிதியாண்டில் 78 கோடி ரூபாயாக இருந்தது. பிரதமர் அலுவலக செலவினங்களுக்காக 73.52 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டு பட்ஜெட்டில் 68 கோடி ஆக தான் இருந்தது பிரதமர் அலுவலகத்திற்கான செயல்பாட்டு செலவினங்கள் உயர்ந்திருப்பதால் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல இந்தியாவுக்கு வருகை தரக்கூடிய விருந்தினர்களின் உபசரிப்பு மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட செலவினங்களுக்காக 5.76 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் 6.20 கோடியாக தான் இருந்தது. முன்னாள் ஆளுநர்களின் செலவினங்களுக்காக 1.53 கோடியை அரசு ஒதுக்கீடு செய்திருக்கிற.
துறைவாரியாக எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்ற விவரங்களும் வெளிவந்திருக்கின்றன. இதன்படி அதிகபட்சமாக மத்திய அரசு நிதித்துறைக்கு 19 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறது. பாதுகாப்புத் துறைக்கு 7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. வேளாண் துறைக்கு 1.4 லட்சம் கோடி , அணுசக்தி துறைக்கு 24,123.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு 24 ,566 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு 2,81,377 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு 28,183 கோடி ரூபாயும் , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு 4479 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications