சென்னை: 2024ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். பட்ஜெட் அறிவிப்புகள் முதலீடுகளைப் பாதிக்கும் என்பதால் இந்த எதிர்பார்ப்பு இயல்பானது. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 738.81 புள்ளிகள் சரிந்து 80,604.65 புள்ளிகளை எட்டியுள்ளது. இதன் காரணமாக, ஒரே நாளில் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பைச் சந்தித்தனர்.
இந்த சரிவு, பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நேரத்தில் ஏற்படும் இயல்பான சரிவாகப் பார்க்கப்படுகிறது. பொதுவாக பட்ஜெட் அறிவிக்கும் முன்பு பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தங்களது பங்கு முதலீட்டிலிருந்து லாபம் பார்க்கும் விதமாக, உயர்மட்டத்தை எட்டிய பங்குகள், குறைவான லாபத்தைத் தரும் பங்குகளை விற்பனை செய்து லாபத்தைப் பார்ப்பது வழக்கம்.

பங்கு தரகு நிறுவனமான எலாரா செக்யூரிட்டீஸ், பட்ஜெட் அறிவிப்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கக்கூடிய சமூக பாதுகாப்பு திட்டங்களைப் பங்குச்சந்தை ஏற்கனவே கணித்து விட்டதாகத் தெரிவித்துள்ளது.
அதாவது, "பட்ஜெட் பெரிதும் ஏமாற்றமளிக்காவிட்டால், அதாவது மூலதன ஆதாய வரி விகிதத்தை உயர்த்துவது அல்லது அதிரடியான சீர்திருத்தங்களை அறிவிப்பது போன்றவை நடக்காவிட்டால், இனி வரும் காலங்களில் பங்குச் சந்தையின் போக்கு நிறுவனங்களின் லாப ஈட்டும் வளர்ச்சியையே சார்ந்திருக்கும்" என்று எலாரா செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பங்குச் சந்தையையும், பங்குச்சந்தை முதலீட்டாளர்களையும் உற்சாகப்படுத்தும் மூன்று விஷயங்களை எலாரா செக்யூரிட்டீஸ் பட்டியலிட்டு உள்ளது. இதுகுறித்து எலாரா செக்யூரிட்டீஸ் கூறுகையில், பங்குச் சந்தையின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கு, 2024ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மூன்று முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் அவை:
நிதி நிலைமை வலுப்படுத்துதல் (Fiscal Consolidation): 2026ஆம் ஆண்டிற்கான நிதி நிலைமை வலுப்படுத்தும் திட்டத்தை அரசு பின்பற்றுவது கடன் மதிப்பீட்டிற்கு (credit rating) சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக, வட்டி விகிதங்களால் பாதிக்கப்படும் துறைகளான ஆட்டோமொபைல், வங்கிகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருந்து நிறுவனங்கள் ஆகியவை பயன்பெறும்.
நுகர்வோர் செலவை அதிகரிப்பு (Consumption Boost): கிராமப்புற வருமானம், ஊதியங்கள் மற்றும் நுகர்வோர் செலவுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், முதலில் சில்லறை விற்பனை நிறுவனங்கள் மற்றும் குறைந்த விலை உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பயன்பெறும். இதன் தொடர்ச்சியாக, பின்னர் வரும் காலங்களில் FMCG நிறுவனங்கள் பயன்பெறும்.
மூலதனச் செலவு அதிகரிப்பு (Capex Spending): இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான துறைகளில் டார்கெட் வைத்துச் செய்யப்படும் மூலதனச் செலவுகளைப் பங்குச் சந்தை வரவேற்கும். விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை, மூலதன பொருட்கள் தயாரிக்கும் துறைகள் போன்றவை தொடர்ந்து முதலீட்டாளர்களைக் கவரும் என்றாலும், இந்த துறைகளில் தற்போது அதிக மதிப்பு கொண்டு இருப்பதால் கூடுதல் மதிப்பீட்டைப் பெறுவது கடனம் என தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications