கர்நாடக மாநில அரசு பேருந்து கட்டணங்களை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜனவரி 5ஆம் தேதி முதல் இந்த பேருந்து கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடத்தப்பட்ட அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது இதன்படி கர்நாடக மாநிலத்தில் நான்கு போக்குவரத்து கழகங்களின் கீழ் இயக்கப்படும் அனைத்து அரசு பேருந்துகளின் கட்டணமும் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட இருக்கிறது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் பாட்டில் அமைச்சரவை கூட்டத்தில் பேருந்து கட்டண உயர்வு உட்பட 23 விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக பிஎம்டிசி கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது என்றும் கேஎஸ்ஆர்டிசி, என்டபள்யூகேஆர்டிசி மற்றும் கேகேஆர்டிசி ஆகிய மூன்று பேருந்து போக்குவரத்து கழகங்களில் பேருந்து கட்டணங்கள் 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் உயர்த்தப்படுகிறது என்றும் தெரிவித்தார். தற்போது பேருந்துகளை இயக்குவதற்கான செலவினங்கள் அதிகரித்து விட்டன, டீசல் விலை உயர்வு, ஊழியர்களுக்கான சம்பளம் என செலவினங்கள் உயர்ந்ததே கட்டண உயர்வுக்கு காரணம் என தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டில் டீசல் விலை ஒரு லிட்டர் 60 ரூபாய் என்ற அளவிற்கு விற்பனையான போது தான் பிஎம்டிசி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது என்று நினைவூட்டினார். இந்த நான்கு பேருந்து போக்குவரத்து கழகங்களிலும் நாள்தோறும் டீசல் டீசலுக்கு மட்டும் சுமார் 13 கோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாக தெரிவித்தார். 2015இல் 9 கோடி ரூபாயாக இருந்த டீசல் செலவினம் தற்போது 13.2 கோடி என உயர்ந்திருக்கிறது என அவர் கூறியுள்ளார்.
ஊழியர்களுக்கான ஊதியம் 12.95 கோடி ரூபாயாக இருந்து தற்போது 18.36 கோடி ரூபாய் என உயர்ந்திருக்கிறது என பாட்டில் தெரிவித்தார். தற்போது பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறோம் என கூறிய அவர் பேருந்து கட்டண உயர்வால் அரசுக்கு மாதம் தோறும் 74.85 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும் என தெரிவித்துள்ளார்.
அது தவிர பெண்களுக்கான இலவச பேருந்து வசதி தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களோடு ஒப்பிடும்போது கர்நாடகாவில் பேருந்து கட்டணங்கள் குறைவாகத்தான் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சியான பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கிவிட்டு ஆண்களிடம் அந்த கட்டணத்தை வசூல் செய்கிறீர்களா என பாஜகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Story Written By: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications