குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை தரும் பேப்பர் கப் தயாரிப்பு தொழில்

நீங்கள் ஒரு தொழிலைத் தொடங்க நினைத்தால், உங்கள் எண்ணம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உங்களது தயாரிப்புகள் ஏற்றதாக இருக்குமா என்று முன்கூட்டியே சிந்திக்க வேண்டும். அப்படி நீங்கள் செய்யும் தொழில் குறைந்த முதலீட்டில் அதிக வருவாயைப் பெற்றுத் தருமா என்பதையும் கணிக்க வேண்டும்.

அப்படி குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தைத் தரக்கூடிய தொழில்களில் பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலும் ஒன்று. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இப்போது அதிகரித்து விட்டதால் பேப்பர் கப்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதனால் பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கிறது.

குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை தரும் பேப்பர் கப் தயாரிப்பு தொழில்

மக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்து மாறி சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு தரும் பேப்பர் கப் போன்ற தயாரிப்புகளை நாடத் தொடங்கி விட்டனர்.

இந்திய அரசு மாசுக்களை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேப்பர் கப் பிசினஸ் செழித்து விட்டது. தொழில் முனைவோருக்க மத்திய அரசின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தொழில் தொடங்குவதற்கு மானியமும் வழங்கப்படுகிறது. பேப்பர் கப் தயாரிப்புத் தொழிலை செய்வதற்கு குறைந்த பட்ச முதலீடு இருந்தால் போதும். விதவிதமான பேப்பர் கப்களைத் தயாரிக்க நிறைய இயந்திரங்கள் வந்து விட்டன.

குறிப்பிட்ட சிறிய அளவு கப்களை தயாரிக்கும் இயந்திரத்தை இப்போது ரூ.1 முதல் ரூ.2 லட்சத்தில் வாங்கி விடலாம். பல்வேறு அளவு கப்களைத் தயாரிக்கும் பெரிய இயந்திரங்களை ரூ.10.70 லட்சத்தில் வாங்கி விடலாம். இதில் இயந்திரம், தளவாடங்கள், பர்னிச்சர், டை, எலக்ட்ரிசிட்டி, இன்ஸ்டலேஷன், முன் தயாரிப்பு செலவுகள் அடங்கி விடும்.

முத்ரா கடன் திட்டத்தின் கீழ் திட்டச் செலவில் 75 சதவீதம் வரை மத்திய அரசிடமிருந்து கடன் உதவியைப் பெறலாம். மீதமுள்ள 25 சதவீதத்தை தொழில்முனைவோர் முதலீடு செய்ய வேண்டும்.

சரியான இயந்திரத்தை தேர்வு செய்து அதில் முதலீடு செய்யுங்கள் உங்கள் உற்பத்தி திறன் மற்றும் பட்ஜெட்டின் அடிப்படையில் இயந்திரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சிறிய இயந்திரங்கள் ஆரம்பநிலைக்கு ஏற்றது.

காகித சுருள்கள் மற்றும் கீழ் ரீல்கள் போன்ற மூலப் பொருட்களை வாங்கவும். பேப்பர் ரீல்கள் ஒரு கிலோவுக்கு தோராயமாக 10 இந்திய ரூபாயில் கிடைக்கின்றன, அதே சமயம் கீழ் ரீல்களின் விலை ஒரு கிலோவுக்ற்கு சுமார் 80 ரூபாயாக உள்ளது.

சரியான இயந்திரங்கள் மற்றும் பொருட்களைக் கொண்டு, நீங்கள் உற்பத்தியைத் தொடங்கலாம். உள்ளூர் வணிகங்கள், நிகழ்வுகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு உங்கள் காகித கப்களை சந்தைப்படுத்துங்கள். நடைமுறையில் உள்ள சந்தை போட்டியை கருத்தில் கொண்டு, விலையை நிர்ணயிக்க வேண்டும்.

ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை செய்தால் சுமார் 2.20 கோடி யூனிட் பேப்பர் கப் தயாரிக்க முடியும். ஒவ்வொரு யூனிட்டையும் சராசரியாக 30 பைசா என்ற விகிதத்தில் விற்றால் கணிசமான லாபம் கிடைக்கும்.
காகிதக் கப்களுக்கான வளர்ந்து வரும் தேவை ஒரு தொடர்ச்சியான சந்தையை உறுதி செய்கிறது. இது இந்த முயற்சியை நல்ல லாபத்தை ஈட்டுத் தரும் ஒன்றாக ஆக்குகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+