ஒரு வக்கீலை நியமிக்க கூட எங்ககிட்ட காசு இல்லை.. BYJU'S திவ்யா கோகுல்நாத் புலம்பல்..!!

நாட்டின் பிரபலமான கல்வி தொழில்நுட்ப நிறுவனம் பைஜூஸ். 2015ல் இந்நிறுவனத்தை முன்னாள் ஆசிரியரான பைஜூ ரவீந்திரன் தொடங்கினார். நிறுவனம் தொடங்கிய 4 ஆண்டுகளில் அதாவது 2019ல் இந்நிறுவனம் யூனிகார்ன் அந்தஸ்தை எட்டியது. நிறுவனத்தின் மதிப்பு 100 கோடி டாலரை தாண்டியது. அடுத்த 3 ஆண்டுகளில் 2022ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் மதிப்பு 2,200 கோடி டாலரை எட்டியது. இந்நிறுவனத்தின் அசுர வளர்ச்சி அனைவரையும் வியக்க வைத்தது.

அதிவேக வளர்ச்சி
இந்நிறுவனத்தின் அதிவேக வளர்ச்சியே வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. கடன் உள்ளிட்ட நிதி நெருக்கடிகளால் பைஜூஸ் திணற தொடங்கியது. தற்போது இந்நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ரவீந்திரனும் அவரது மனைவியும், பைஜூஸ் நிறுவனத்தின் இணை நிறுவனருமான திவ்யா கோகுல்நாத்தும் நிறுவனத்துக்கு வாங்கிய கடனை தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால் இதனை திவ்யா கோகுல்நாத் கடுமையாக மறுத்துள்ளார்.

ஒரு வக்கீலை நியமிக்க கூட எங்ககிட்ட காசு இல்லை.. BYJU'S  திவ்யா கோகுல்நாத் புலம்பல்..!!

திவ்யா கோகுல்நாத் நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அமெரிக்க நீதிமன்றங்களில் எங்கள் தரப்பில் வக்கீல்களை நியமிக்க கூட எங்களிடம் பணம் இல்லை. இன்று அமெரிக்காவில் தீர்ப்புகள் ஒரே நீதிமன்றத்தால் எங்களுக்கு வழங்கப்படுகின்றன. ஏனென்றால் எங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. எங்களுக்கு ஒரு 10 லட்சம் டாலர் கொடுங்கள் என்று அவர்கள் (வக்கீல்கள்) கூறும் மின்னஞ்சல்களை (இமெயில்) நான் உங்களுக்கு காண்பிப்பேன்.

10 லட்சம் டாலர்
எங்களுக்கு 10 லட்சம் டாலர் கொடுங்கள் இல்லையென்றால் நாங்கள் ஆஜராக மாட்டோம் என்று வக்கீல்கள் கூறுகிறார்கள். எனக்கு மில்லியன் டாலர்கள் எங்கிருந்து கிடைக்கும்?. நாங்கள் 533 மில்லியன் டாலர்களில் அமர்ந்திருந்தால், நிலைமை இப்படி இருக்காது, இல்லையா?. நாங்கள் நீதிமன்றத்தில் போராடி இருப்போம், வக்கீல்கள் மீது பணத்தை வீசியிருப்போம். உண்மையை சொன்னால், பணத்தை பற்றி எனக்கு கவலையில்லை. அது வரும் போகும்.

லட்சுமி வரலாம், போகலாம். சரஸ்வதி நம்முடன் இருக்கிறாள். எனக்கு நடந்த களங்கத்தை பற்றியது, இது மிகவும் நியாயமற்றது என்று நான் நினைக்கிறேன். இது நம் நாட்டிற்கு நாம் என்ன செய்ய முடியும் என்பதை பற்றியது, நாடு நமக்கு என்ன செய்ய முடியும் என்பதல்ல. எனவே நாங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவர்கள், இந்தியர்களால் தயாரிக்கப்பட்டவர்கள், உலகின் தயாரிப்பு, சேவை, நிறுவனம், மக்கள், மாணவர்கள் முதன்மை நிறுவனம் ஆகியவற்றுக்காக பெருமையுடன் உருவாக்கப்பட்டவர்கள்.

மேக் இன் இந்தியா
அதிக லாபம் தரும் என்பதால் மக்கள் வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் நிறுவனங்களை அமைத்து வந்த நேரத்தில், நாங்கள் அதை விரும்பவில்லை. இது (பைஜூஸ்) ஒரு மேக் இன் இந்தியா கதையாக இருக்க வேண்டும், நாங்கள் எங்கள் தயாரிப்புகளை இந்தியாவில் தயாரிப்போம், நாங்கள் இந்தியாவிலிருந்து எங்கள் சேவைகளை வழங்குவோம், மேலும் கல்வியில் உலகுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்போம், ஏனென்றால் கல்வி இந்தியாவுக்கு சொந்தமானது என்று நாங்கள் கூறினோம்.

எனது கணவரை பைஜூ ரவீந்திரனை தனிமைப்படுத்தும் நோக்கில், அவரது குடும்பத்தினர், சக ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்பட அவருக்கு நெருக்கமானவர்கள் மிரட்டப்பட்டனர். அவர்கள் (எதிரிகள்) மறைமுகமாக அதைத்தான் சொல்ல முயற்சிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் மோதல் என்று சொல்கிறார்கள் அல்லது நற்பெயருக்கு சேதம் விளைவிக்கலாம்.

உண்மை
அதனால் நான் இதிலிருந்து விலகி இருப்பேன் என்று நீங்கள் சொல்லலாம். இது நடக்கப் போவதில்லை, ஏனென்றால் நம் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் ஏதோ ஒன்று இருக்கிறது. உண்மை இருக்கிறது. நம் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் இறுதி நோக்கம் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+