பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் 3 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த 3 திட்டங்களும் ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்கான மொத்த மதிப்பீடு 6,456 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்புதல் வழங்கப்பட்ட இந்த திட்டங்களில் 2 புதிய ரயில் பாதை அமைப்பதற்கான ஒப்புதல் மற்றும் மல்டி ட்ராக்கிங் அமைப்பதற்கான ஒப்புதல் ஆகியவை அடங்கும்.
இந்த மாநிலங்களில் உள்ள ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த திட்டங்கள் இந்திய ரயில்வே நெட்வொர்க்கை சுமார் 300 கி.மீ. விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வழித் திட்டங்கள் நேரடி இணைப்பை வழங்கும் மற்றும் ரயில்வே இயக்கத்தை மேம்படுத்தும். மல்டி-டிராக்கிங் திட்டம் செயல்பாடுகளை எளிதாக்கும் மற்றும் நெரிசலைக் குறைக்கும், இந்திய ரயில்வே முழுவதும் மிகவும் பரபரப்பான பிரிவுகளில் தேவையான உள்கட்டமைப்பு மேம்பாட்டை வழங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரூ. 6,456 கோடி செலவில் மூன்று ரயில்வே திட்டங்களும், PM-Gati Shakti தேசிய மாஸ்டர் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்படவுள்ளன. இந்த திட்டங்களில் இரண்டு புதிய ரயில் பாதைகள் மற்றும் ஒரு மல்டி-ட்ராக்கிங் ஆகியவை அடங்கும். இது ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கர் முழுவதும் ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய ரயில் பாதைகளாகும்.
மல்டி-டிராக்கிங் திட்டம் இந்திய ரயில்வேயின் மிகவும் பரபரப்பான சில இடங்களில் செயல்பாடுகளை எளிதாக்கும், நெரிசலைக் குறைக்கும் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டங்களின் ஒரு பகுதியாக 14 புதிய நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ரயில் பாதைகள் சுமார் 1,300 கிராமங்களை இணைக்கும் மற்றும் சுமார் 11 லட்சம் மக்களுக்கு பயனளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
விவசாய பொருட்கள், உரங்கள், நிலக்கரி, இரும்பு தாது, ஸ்டீல், சிமெண்ட் மற்றும் சுண்ணாம்பு போன்ற பொருட்களை கொண்டு செல்லும் வகையில் சரக்கு போக்குவரத்திற்கு பயனளிக்கும்.
இந்த 3 திட்டங்களின் மூலம் ரயில்வே நெட்வொர்க் இன்னும் விரிவடைந்து மக்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மல்டி ட்ராக் அமைப்பதன் மூலம் ஒரே நேரத்தில் பல ட்ரெயின்களின் வரத்து இருக்கும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடையின்றி சரக்கு ரயில்களும் பயணிகள் ரயில்களும் இயங்கும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications