பல மாத தாமதத்திற்குப் பிறகு, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதியாக செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கான பரஸ்பர சுங்க வரி 50%இல் இருந்து 18%ஆக குறைக்கப்படும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தங்கள் சமூக ஊடகப் பதிவுகளில் இந்த ஒப்பந்தத்தையும், வரி குறைப்பையும் உறுதி செய்தனர்.
மூடிஸ் தர நிர்ணய நிறுவனம், ராய்ட்டர்ஸ் தகவல் வாயிலாக, அமெரிக்க சுங்க வரிக் குறைப்பு இந்தியாவின் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, ரத்தினங்கள், ஆபரணங்கள், ஜவுளி மற்றும் ஆடை போன்ற அதிக வேலைவாய்ப்பு சார்ந்த துறைகள் சாதகமான தாக்கத்தைப் பெறும் என மூடிஸ் எதிர்பார்க்கிறது. ஏனெனில், இத்துறைகள் 25% கூடுதல் வரிவிதிப்பால் 50% வரிச் சுமையுடன் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தன.

அதே சமயம், மருந்து மற்றும் நுகர்வோர் மின்னணுவியல் துறைகளுக்கு இந்த வரிக் குறைப்பால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என மூடிஸ் கூறியுள்ளது. ஏனெனில், இத்துறைப் பொருட்கள் ஏற்கனவே 50% உயர் வரிகளில் இருந்து விலக்கு பெற்றிருந்தன.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா தனது மிகவும் பாதுகாக்கப்பட்ட விவசாயத் துறை, தொலைத்தொடர்பு மற்றும் மருந்துத் துறைகளை ஓரளவு திறக்க ஒப்புக்கொண்டுள்ளது. "அமெரிக்கத் தயாரிப்புகளை வாங்குவதற்கான உறுதிமொழி மருந்து, தொலைத்தொடர்பு, பாதுகாப்பு, பெட்ரோலியம் மற்றும் விமானத் துறைகளை உள்ளடக்கியது. இது பல ஆண்டுகளாக செய்யப்படும்," என்று ஓர் இந்திய அதிகாரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
ரஷ்ய எண்ணெய்க் கொள்முதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பதிவில், பிரதமர் மோடி ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிலிருந்து அதிகம் வாங்க ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த நிறுத்தமானது உடனடியாக நிகழாது என மூடிஸ் நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்தியா தரப்பிலும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
"இந்தியா ரஷ்யாவில் இருந்து அனைத்து கச்சா எண்ணெய் கொள்முதல்களையும் உடனடியாக நிறுத்துவது சாத்தியமில்லை, ஏனெனில் அத்தகைய நடவடிக்கை அதன் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்" என்று மூடிஸ் கூறியது. அத்துடன், "இந்தியா ரஷ்யா அல்லாத எண்ணெய்க்கு முற்றிலும் மாறுவது பிற பகுதிகளில் விநியோகத்தை இறுக்கி, விலைகளை உயர்த்தி, அதிக பணவீக்கத்தை ஏற்படுத்தும்" எனவும் மூடிஸ் எச்சரித்தது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

ஈரான் போர்: மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு டிரம்ப் அரசு முக்கிய உத்தரவு!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?



Click it and Unblock the Notifications