இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கும் அலைமோதி வருவதை காண முடிகிறது. இதனால் கொதித்தெழுந்த மக்கL அதிபர் மாளிகையை தங்கம் வசம் கொண்டு வந்தனர்.
மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு, அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அதிபர் மாளிகையை அடுத்து பிரதமர் அலுவலத்தினையும் முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ள நிலையில், அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
அவசர நிலை பிரகடனம்
இந்த அவசர நிலை பிரகடனத்தின் பdi, ராணுவம், போலீசாருக்கு கூடுதல் அதிகாரம், மக்கள் ஓன்று கூடி போராட்டம் நடத்தவும் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளன. இது மக்கள் மத்தியில் இன்னும் கோபத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இலங்கையில் இன்னும் நிலைமை மோசமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மட்டுமே உதவி
இப்படி பல பிரச்சனைகளுக்கு மத்தியிலும் இலங்கைக்கு இந்தியா மட்டுமே ஆரம்பத்தில் இருந்தே உதவி செய்து வருகின்றது. சீனாவோ, சர்வதேச நாணய நிதியமோ, உலக வங்கியோ அல்லது வேறு எந்த நாடும் உதவிக்கு முன் வரவில்லை.
அதேசமயம் இலங்கைக்கு இந்திய அரசு எப்போதும் ஆதரவாக இருப்பதாகவும், அண்டை நாடு என்ற முறையில் உதவ முயற்சி செய்வதாகவும் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெயசங்கர் சமீபத்தில் கூறியிருந்தார்.
இலங்கை VS இந்தியா Vs கடன்
இதற்கிடையில் ஓரு தரப்பு இலங்கையை இந்திய கைபற்ற முடியுமா என்ற கேள்வியும் எழப்பியுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இருந்து வரும் இலங்கை, சமீபத்தில் அதன் 51 பில்லியன் டாலர் வெளி நாட்டு கடனை செலுத்த முடியாததாக அறிவித்தது. இதில் உள்நாட்டு நிலவரம் எதுவும் சேர்க்கப்படவில்லை.
இந்தியாவின் வெளி நாட்டுக் கடன் விகிதமானது மார்ச் 2022வுடன் முடிவடைந்த நிதியாண்டில் 47.1 பில்லியன் டாலர் அதிகரித்து, 620.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இலங்கையோடு ஒப்பிடும்போது இந்தியாவின் கடன் 6 மடங்கிற்கும் மேலாக அதிகம் எனலாம்.
இந்தியா: இலங்கை VS மக்கள்
UN அறிக்கையின் படி இந்தியாவின் மக்கள் தொகை நடப்பு ஆண்டில் 1.412 பில்லியன் டாலராகும். அதேசமயம் இலங்கையின் மக்கள் தொகை சுமார் 21,594,657 பேராகும். இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கை மக்கள் தொகை என்பது மிகச் சிறியதே.
இந்தியாவின் மக்கள் தொகை அடுத்தாண்டின் இறுதியில் சீனாவினை விட அதிகரிக்கலாம் என சில தினங்களுக்கு முன்பு ஆயவறிக்கைகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
கையிருப்பு எவ்வளவு?
ரிசர்வ் வங்கியின் அன்னிய செலவாணி கையிருப்பு 2019ம் ஆண்டில் 7.6 பில்லியன் டாலராக இருந்த நிலையில், அது படிப்படியாக குறைந்த வண்ணமே உள்ளது. இது கடந்த 2020ல் 5.7 பில்லியன் டாலராகும். இதே 2021ல் 3.1 பில்லியன் டாலராகவும், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கால கலட்டத்தில் வெறும் 1.9 பில்லியன் டாலராகவும் மட்டுமே இருந்துள்ளது. இது தற்போது இன்னும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே ஆர்பிஐ தரவின் படி இந்தியாவின் அன்னிய செலவாணி கையிருப்பு ஜூன் 19வுடன் முடிவடைந்த வாரத்தில் 5.9 பில்லியன் டாலர் குறைந்து, 590.59 பில்லியன் டாலராக உள்ளது.
எல்லாத் தகுதியும் உண்டு
இலங்கையுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் கடன் மடங்கு அதிகம் இருந்தாலும், அன்னிய கையிருப்பும் அதிகளவில் உள்ளது. அதோடு இலங்கையின் மக்கள் தொகையையும் இந்தியாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவால் கைபற்றுவதில் ஏதும் சிரமம் இருக்காது. எனினும் இன்று வரையில் இலங்கை அண்டை நாடு என்ற முறையில் தான் உதவி வருவதாக கூறியிருந்தது நினைவுக்கூறத்தக்கது.
More From GoodReturns

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications