துபாய் மிகக் குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நகரமாக விளங்கி வருகிறது. அங்கு ஒளிரும் கட்டடங்கள், பிரம்மாண்டமான கார்கள், வருமான வரி இல்லாத வாழ்க்கை, சினிமாவில் இருந்து வந்ததுபோல் தோன்றும் வீடுகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துபாய் உலகிலேயே மிக விலையுயர்ந்த 22 நகரமாகவும், மத்திய கிழக்கில் மிகவும் விலையுயர்ந்த நகரமாகவும் இருந்தது. அதேபோல், ஜெனீவாவுக்குப் பிறகு, உலகின் மிக அதிக விலையுயர்ந்த ஓட்டல் அறைகள் இருக்கும் இடமாக துபாயின் ஹோட்டல் அறைகள் மதிப்பிடப்பட்டன.
மேலும் இது கோடீஸ்வரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பெரிய வணிகக் குடும்பங்களுக்கே உரிய இடமாக உணரப்பட்டது. ஆனால், இப்போது நிலைமை மாறி வருகிறது. சம்பளம் பெறும் ஏராளமான தொழிலாளர்கள், குறிப்பாக இந்தியர்கள் பெரும்பாலானோர் தற்போது ஒரே கேள்வியை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். அதாவது, நானும் துபாயில் வீடு வாங்க முடியுமா..?

இதுகுறித்து Proact Luxury Real Estate நிறுவனத்தின் CEO ரிது காந்த் ஓஜா கூறுகையில், "இந்தியர்களிடம் இருக்கும் சொத்து ஆர்வம் தற்போது உயர் வருமானத்தைக் கொண்டவர்களைக் (high-net-worth individuals) கடந்துவிட்டது. துபாயில் பலவகையான சொத்துகளுக்கு இந்தியர்கள் மத்தியில் வலுவான ஈர்ப்பு காணப்படுகிறது. குறிப்பாக, மேம்பட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய அபார்ட்மெண்ட்கள் அதிகமான தேவை பெற்றுள்ளது. மேலும், வில்லாக்கள் மற்றும் டவுன்ஹவுஸ்-களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. வசதியான வாழ்க்கை முறையையும், பெரும் பரப்பு நாடும் குடும்பங்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
பெரும்பாலான சம்பளம் வாங்கும் இந்தியர்களின் முதல் கவலையே செலவு தான். துபாய் பெரும்பாலும் உயர்நிலை ரியல் எஸ்டேட் சந்தையாக சித்தரிக்கப்படுகையில், உயர் வருமானம் கொண்ட நடுத்தர வர்க்க வாங்குபவர்களுக்கு ஏற்ற நுழைவு புள்ளிகள் உள்ளன. நல்ல சுற்றுப்புறங்களில் நடுத்தர அளவிலான அடுக்குமாடி குடியிருப்புகள் பெரும்பாலும் AED 1 மில்லியன் முதல் AED 3 மில்லியன் வரம்பில் (ரூ.1.5 கோடி முதல் ரூ.3 கோடி வரை) இருக்கும்.
இதுபோன்ற சொத்துக்களுக்கு, வாங்குபவர் முன்பணமாக 20% செலுத்த வேண்டும். துபாய் நிலத்துறையின் பதிவு கட்டணமாக 4% செலுத்த வேண்டும். அதாவது, ஒரு இந்திய வாங்குபவர் சந்தையில் நுழைய சுமார் ரூ.35 - ரூ.50 லட்சம் சேமிப்பு வைத்திருக்க வேண்டும். இது அனைவருக்கும் பொருந்தாது. ஆனால் இரட்டை வருமானம் கொண்ட குடும்பங்கள் அல்லது நீண்ட கால சேமிப்பு மற்றும் நிதி ஒழுக்கம் கொண்ட நிபுணர்களுக்கு, இது சாத்தியமாகும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், முழு பணத்தையும் முன்கூட்டியே செலுத்துவது என்பது அரிதானது என்றாலும், துபாயின் சொத்துச் சந்தை பல நிதி வழிகளை வழங்குகிறது. குடியுரிமை பெறாத இந்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செயல்படும் வங்கிகளில் அடமான விருப்பங்களை ஆராய்ந்து பார்க்கலாம். பொதுவாக, இவற்றுக்கு வருமானச் சான்று மற்றும் செல்லுபடியாகும். பாஸ்போர்ட் தேவைப்படும். NRI-களுக்கான கடன் மதிப்பு விகிதம், வாங்குபவரின் நிதி சுயவிவரத்தைப் பொறுத்து 50% முதல் 80% வரை இருக்கும். இருப்பினும், அனைத்து கட்டணத் திட்டங்களையும் முதலிலேயே கவனமாக படித்துக் கொள்ள வேண்டும்.
விதிமுறைகள் மாறுபடலாம். சில ஆவணங்களில் கவர்ச்சிகரமானதாகத் தோன்றலாம். ஆனால், அதில் சில மறைக்கப்பட்ட நிபந்தனைகளும் உள்ளன. எனவே, அதுகுறித்து ஒரு நல்ல ஆலோசகர் உங்களுக்காக விவரிப்பார். லக்னோ அல்லது ஜெய்ப்பூரில் ஒரு பிளாட் வாங்குவதை விட முன்பண முதலீடு அதிகமாக இருந்தாலும், துபாயில் வருமானம் கணிசமாக சிறப்பாக உள்ளது. வருமானத்தில் மட்டுமே கவனம் செலுத்துவோருக்கு துபாய் தெளிவான நன்மைகளைக் கொண்டுள்ளது. துபாய் சிறந்த உள்கட்டமைப்பு, பாதுகாப்பான சட்டச் சூழல் மற்றும் மிகச் சிறந்த வாடகையை கொண்டுள்ளது" என்று ஓஜா தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!

துபாய் விமான நிலையத்தில் விபத்து..? எமிரேட்ஸ் சொன்ன குட் நியூஸ்..!! இந்தியர்கள் ஹேப்பி..!!

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications