ஈரான் போர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பரிணாமத்தை எட்டி வருகிறது. ஒருவார காலத்தோடு இந்த போர் முடிந்த விடும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக ஒவ்வொரு வாரமும் இந்த போர் புதிய புதிய ஆயுதங்களின் பயன்பாட்டால் தீவிரமடைந்த வண்ணம் தான் இருக்கிறது. யாராவது இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவார்களா என பல்வேறு உலக நாடுகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
அமெரிக்கா , இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஈரான் ராணுவத்திற்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கி இன்று வரை போர் நீடித்து வருகிறது. போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி இருக்கிறது. இதனால் சரக்கு கப்பல்கள் போக்குவரத்து முடங்கிப் போய் இருக்கிறது. ஆசிய நாடுகளுக்கு தேவையான 85 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எல்பிஜி,எல்என்ஜி எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தப் போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்வதற்கு எந்த நாடுகளும் முன் வருவதாக தெரியவில்லை. முதலில் ரஷ்யா மத்தியஸ்தம் செய்ய தயார் என கூறியது ஆனால் அதற்கு இரு நாடுகளும் ஒத்துவராததால் ரஷ்யா அந்த முடிவினை கைவிட்டது. இந்த சூழலில் ஈரானுடனும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனும் நல்லுறவு கொண்டிருக்கக்கூடிய உலக நாடுகளும் அந்த நாடுகளின் தலைவர்களும் சமரச பேச்சுவார்த்தை நடத்த பல்வேறு நாடுகளும் கோரிக்கை வைத்து வருகின்றன.
அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் அதிகாரி கர்ணல் டக்லஸ் மெக்ரேகர் இருதரப்பிலும் சமரசம் செய்ய இந்திய பிரதமரால் மட்டுமே முடியும் என கூறியிருந்தார். பின்லாந்து நாட்டு பிரதமர் கூட அதிபர் கூட இந்தியா நினைத்தால் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடியும் என தெரிவித்திருந்தார். இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் ஈரான் அதிபர் மசூத் பெஷசிக்சினுடன் தொலைபேசியில் பேசி இருக்கிறார்.

தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் பிரதமர் மோடி ஈரான் அதிபர் உடன் தொலைபேசியில் பேசினேன் , ரம்லான் மற்றும் ஈரான் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன் என கூறியிருக்கிறார். மேற்காசியாவில் அமைதி , ஸ்திரத்தன்மை கொண்ட எதிர்காலம் அமைய இருவருமே விரும்புகிறோம் என அதில் குறிப்பிட்டு இருக்கிறார். பிராந்தியத்தின் முக்கிய அமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் சர்வதேச விநியோக சங்கிலி தடைப்பட்டு இருக்கிறது இதற்கு கண்டனம் தெரிவித்ததாக மோடி கூறியுள்ளார்.
தடையற்ற கடல்வழி போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என அப்போது வலியுறுத்தியதாக கூறியிருக்கும் மோடி ஈரானில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு அந்த நாடு தொடர்ந்து ஒத்துழைப்பு தருகிறது அதற்காக நன்றி தெரிவித்தேன் என கூறியிருக்கிறார். இந்த பேச்சுவார்த்தையின் போது ஈரான் தரப்பில் வெளிநாட்டு தலையீடு இல்லாமல் மேற்காசிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பை உருவாக்குது, அமைதியை நிலைநிறுத்த பிரிக்ஸ் கூட்டமைப்பு பங்காற்ற வேண்டும் என கேட்டு கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி , ஈரான் அதிபருடன் பேசுவதற்கு முன் சில தினங்களுக்கு முன்பு அதாவது கடந்த 18 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் ஜாயித் அல் நயான், குவைத் இளவரசர் ஆகியோருடனும் பேசியிருந்தார். அதே போல பிரான்ஸ் ,ஜோர்டன், மலேசியா நாட்டு தலைவர்களுடன் பேசி இருந்தார். இதனை அடுத்து அவர் ஈரானுடன் பேசியிருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தியா மத்தியஸ்த முயற்சி எடுத்து ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வந்தால் உலக அரசியலில் இந்தியாவுக்கு அசைக்க முடியாத இடம் கிடைக்கும்.
More From GoodReturns

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்..? டிரம்ப் பேச்சால் புது திருப்பம்..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

குவைத் மீது ஈரான் திடீர் தாக்குதல்.. இஸ்ரேல்-க்கு பதிலடி.. பற்றி எரியும் கச்சா எண்ணெய் ஆலை..!!

புது வருடத்தில் ஈரானை திட்டமிட்டு தாக்கும் இஸ்ரேல்.. பெரும் சோகத்தில் ஈரான் மக்கள்..!

குறிவைத்து அடித்த ஈரான்.. 3 இஸ்ரேல் விமானங்கள் நொறுங்கியது..!!

துபாய் முதல் கத்தார் வரை.. ஈரானின் திடீர் தாக்குதலால் ஷாக்.. அமெரிக்காவின் அடுத்த திட்டம் என்ன..?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஈரான் போரால் தலைதூக்கும் புது பிரச்சனை..!! இந்திய மக்களுக்கு அடுத்தடுத்த சிக்கல்..!!

நாடு முழுவதும் உயர்த்தப்பட்டது பிரீமியம் பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

அமெரிக்காவில் ஈரானின் Sleeper cell-களா? பாரசீக மொழியில் பறந்த மெசேஜ்.. உளவுத்துறையினர் அதிர்ச்சி..!!

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

ஈரான் போரில் முக்கிய திருப்பம்: பாதுகாப்பு படை தலைவர் கொலை.. நூலிழையில் உயிர் தப்பிய கமேனி மகன்!!



Click it and Unblock the Notifications

