புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மண்ணுக்கே அழைக்குமா பீகார்..? நிதிஷின் 20 ஆண்டுகால தவறு இதுதான்..!!

பீகார் மாநிலம் பொருளாதார ரீதியாக நல்ல வளர்ச்சியை அடைந்ததாக தரவுகள் காட்டினாலும், கள யதார்த்தம் முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது. மாநிலப் பொருளாதாரம் (GSDP) கடந்த 2011-12 ஆம் ஆண்டில் ரூ.2.5 லட்சம் கோடியில் இருந்து 2023-24 ஆம் ஆண்டில் ரூ.8.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தனிநபர் வருமானமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், பீகார் இன்னமும் இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மாநிலங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளது. மனித மேம்பாட்டு குறியீடுகளில் அதன் மோசமான நிலை, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் ஒரு தடையாக அமைகிறது.

வேலைவாய்ப்பு : இந்த வளர்ச்சி இருந்தபோதிலும், பீகார் மாநிலத்தால் அதன் இளைஞர்களுக்கு போதுமான வேலைவாய்ப்பை உருவாக்க முடியவில்லை. இதன் விளைவாக, மாநில இளைஞர்கள் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தொழிலாளர்களாக புலம் பெயர்ந்து செல்லும் மிகப்பெரிய மூலமாகவே பீகார் நீடிக்கிறது. இதற்கு காரணம், தமிழ்நாட்டை போலவோ அல்லது குஜராத்தை போலவோ பீகாரில் பெரிய அளவிலான தொழில்மயமாக்கல் (Industrialisation) நடைபெறாததுதான். இங்கு வேளாண்மைத் துறையே 76% பேருக்கு வேலை அளிக்கிறது. உற்பத்தித் துறையின் பங்களிப்போ மிகக் குறைவாக, மொத்த உற்பத்தியில் வெறும் 7.6% மட்டுமே உள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மண்ணுக்கே அழைக்குமா பீகார்..? நிதிஷின் 20 ஆண்டுகால தவறு இதுதான்..!!

தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), சட்டமன்ற தேர்தலில் மிகப் பெரிய வெற்றியுடன் ஆட்சியை தக்கவைத்திருக்கும் இந்தத் தருணத்தில், பீகாரின் பொருளாதாரத்தை உண்மையாக மேம்படுத்த, அதிவேக தொழில்மயமாக்கலை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால், அங்கு தொழில்மயமாக்கலை தடுக்கும் முக்கியக் காரணியாக இருப்பது, உற்பத்தித் துறைக்கு தேவையான வலுவான உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டாளர்-நட்பு சூழல் இல்லாமையே ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெரிய சர்க்கரை ஆலை நிறுவனம் பீகாரில் முதலீடு செய்ய உரிமம் பெற்றது. பீகாரில் விளையும் கரும்பில் அதிக சர்க்கரை சத்து இருந்ததால், இது இலாபகரமான வணிகமாக இருந்திருக்கும். ஆனால், ஆலை அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில், உற்பத்தி செய்த சர்க்கரையை எடுத்துச் செல்ல சாலை வசதியே இல்லை என்பதை அறிந்த அந்த ஆலை நிறுவனம், இத்திட்டத்தையே கைவிட்டது.

இத்தகைய உள்கட்டமைப்பு குறைபாடுகளை சரிசெய்யாமல், கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ந்து இலவசங்கள் மற்றும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையே அளித்து வந்தனர். இந்த தேர்தலிலும் தேஜஸ்வி யாதவ் அளித்த 'ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அரசு வேலை' என்ற வாக்குறுதியை மக்கள் நிராகரித்திருப்பதன் மூலம், இந்த உத்தியின் தோல்வி நிரூபணமாகியுள்ளது.

ஒடிசாவை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் :

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பீகாருக்கு உண்மையிலேயே நன்மை செய்ய விரும்பினால், உடனடியாக தொழில்மயமாக்கலை தொடங்க வேண்டும். இதற்குப் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு முதலீடுகளும், பீகாருக்குப் பொருத்தமான தொழில்களை அடையாளம் காண்பதும் அவசியம். இதேபோல் தொழிலாளர்கள் அதிகம் புலம் பெயர்ந்த ஒடிசா மாநிலம், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு தொழில்மயமாக்கலுக்காக கொண்டு வந்த கொள்கைகள் பீகாருக்கு ஒரு பாடமாக அமையும்.

ஒடிசா, தனது தொழிலாளர்களை திறம்படப் பயிற்சி அளித்தது. கனிம வளம் நிறைந்திருந்தாலும், கனிமம் அல்லாத துறைகளிலும் முதலீடுகளை ஈர்க்க முற்பட்டது. குறிப்பாக, அதன் தொழிலாளர்கள் தமிழகத்தின் ஜவுளித் துறையில் அதிகம் பணியாற்றுவதால், ஜவுளி முதலீடுகளை தன் மாநிலத்திற்கு கொண்டு வர கவனம் செலுத்தியது. இதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் கண்டது. பீகார் இந்த உத்தியை பின்பற்றி, முதலீட்டாளர்களை கவரும் வகையில் தனது பொருளாதாரச் சூழலை மாற்றி அமைக்க வேண்டும். அப்போதுதான் பீகார் இளைஞர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே பணிபுரியும் கனவு நனவாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+