இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு என்பது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது என்பதும் பொதுமக்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவு முதலீடு செய்யப்பட்டு வருவதாகவும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும் இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய முடியுமா? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்ட்
இந்தியாவில் உள்ள யார் வேண்டுமானாலும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம் என்பதும் 18 வயதுக்கு மேலானவர்கள் ஒரு வங்கி கணக்கு மற்றும் டீமேட் கணக்கை தொடங்கி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் என்பதும் தெரிந்ததே.
வெளிநாட்டு இந்தியர்கள்
இந்த நிலையில் வெளிநாட்டு இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து அதன் பலனை அடைய முடியுமா என்றால் முடியும் என்பதுதான் பதில். ஆனால் அதே நேரத்தில் வெளிநாட்டு இந்தியர்கள் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் இரண்டு வகையான திட்டங்கள் உள்ளன.
இரண்டு திட்டங்கள்
இந்தியாவில் செய்யப்படும் வெளிநாட்டு இந்தியர்களின் முதலீடு மற்றும் அதன் ஆதாயங்களை தாங்கள் வாழும் நாட்டிற்கு எடுத்துச் செல்லும் அடிப்படையில் தொடங்கப்படும் NRE கணக்கு என்பது ஒன்று. இன்னொன்று இந்தியாவில் செய்யப்படும் முதலீடு மற்றும் அதன் ஆதாயத்தை இந்தியாவிலேயே வைத்திருக்கும் அடிப்படையில் துவங்கப்படும் NRO அக்கவுண்ட் ஆகும்.
அமெரிக்கா-கனடா
வெளிநாட்டு இந்தியர்கள் இந்தியாவில் உள்ள மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன்பு கேஒய்சி உள்பட அனைத்து ஒழுங்கு முறைகளையும் மேற்கொள்ள வேண்டும். அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் என்ஆர்ஐ மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுவதை கட்டுப்படுத்தி உள்ளன. எனவே இந்த நாடுகளில் உள்ளவர்கள் மட்டும் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்வதற்கு முன் அதற்கான சாத்தியக் கூறுகளை நிதி ஆலோசகர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
நன்மைகள்
வெளிநாட்டு இந்தியர்கள் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது இந்திய முதலீட்டாளர்களை போன்ற அனைத்து நன்மைகளையும் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வெளிநாட்டு இந்தியர்கள் எஸ்ஐபி மற்றும் லம்ப்சம் ஆகிய இரண்டு வகைகளிலும் முதலீடு செய்ய முடியும். இந்திய முதலீட்டாளர்கள் போலவே தங்கள் வசதிக்கேற்ப ஸ்விட்ச் செய்து கொள்ளும் வசதியும் குரோத் மற்றும் டிவிடெண்ட் ஆகியவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்தும் முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி ஆலோசகர்கள்
அதேபோல் வெளிநாட்டு இந்தியர்கள் தாங்கள் செய்த முதலீட்டை எப்போது வேண்டுமானாலும் அவர்கள் விரும்பும் போது பணமாக்கிக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு இந்தியர்களும் இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு தாராளமாக அனுமதிக்கப்படுகிறது. எனவே வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தாங்கள் சேமிக்கும் பணத்தை இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து அதிக பலன் பெற வேண்டும் என்பதே நிதி ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது.
More From GoodReturns

இஸ்ரேல் - ஈரான்: இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகம் வெளியிட்ட உத்தரவால் NRI-கள் அச்சம்..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications