இந்தியா முழுவதும் தற்போது ட்ரெண்டாக மாறியிருக்கிறார் விஜய் மல்லையா .கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் என்றால் தான் அனைவருக்கும் இவரை தெரியும். இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்த முடியாமல் நாட்டை விட்டு வெளியேறி தற்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்திருக்கிறார்.
டிரெண்டான விஜய் மல்லையா: அண்மையில் விஜய் மல்லையா ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இந்தியா முழுவதும் வைரலானது. அந்த பேட்டியில் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏன் தோல்வி அடைந்தது , இந்தியாவிற்கு தான் திரும்ப முடியுமா என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அவர் பகிர்ந்தார். தன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட எட்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர் அளித்த ஒரு நேரடி பேட்டியாக இது பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்த பேட்டி டிரெண்டானது.

மல்லையாவுக்கு சொந்தமான பங்குகள்: எந்தெந்த நிறுவனங்களில் எல்லாம் விஜய் மல்லையாவுக்கு பங்குகள் இருக்கின்றன அந்த பங்குகளில் இருந்து எல்லாம் அவருக்கு லாபம் கிடைக்கிறதா, விஜய் மல்லையாவால் தொடர்ந்து இந்தியாவில் தனக்கு சொந்தமாக இருக்கும் பங்குகளில் வர்த்தகம் செய்ய முடியுமா என்பன உள்ளிட்ட விவரங்களை நாம் தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விஜய் மல்லையா கிங் பிஷர் நிறுவனத்துக்கு சொந்தமான யுனைடெட் ப்ரீவரிஸ் நிறுவனம், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம், மெக்டொவல் ஹோல்டிங்ஸ் என்ற நிதி நிறுவனம் தற்போது செயல்படாமல் இருக்கக்கூடிய கிங் பிஷர் நிறுவனத்திலும் சொந்தமாக பங்குகளை வைத்திருந்தார். இது தவிர மங்களூர் கெமிக்கல் & பெர்டிலைசர் நிறுவனம், ஹெர்பர்ட்சன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிலும் விஜய் மல்லையா பங்குகளை வாங்கி வைத்திருந்ததார்.
செபி என்ன சொல்கிறது: விஜய் மல்லையா கடன்களை திரும்ப வழங்காமல் நாட்டை விட்டு வெளியேறியதால் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ முடக்கி வைத்துள்ளது. மேலும் அவருக்கு சொந்தமான சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டு வங்கிகளுக்கு செலுத்தப்பட வேண்டிய கடன்கள் திரும்ப செலுத்தப்பட்டன. விஜய் மல்லையாவை பொறுத்தவரை இந்த நிறுவனங்களில் அவருக்கு பங்குகள் இருந்தாலும் தற்போது அவற்றின் நிலை குறித்த தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை.
சொத்துக்கள் முடக்கம்: அவரால் தற்போது அந்த பங்குகளில் வர்த்தகமும் செய்ய முடியாது. ஏனெனில் அவர் கடன் மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நபராக அறியப்பட்டிருக்கிறார். இந்தியாவில் இருக்கும் அவருடைய சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன அல்லது முடக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களில் அவரது பங்குகளும் அடங்கும். எனவே விஜய் மல்லையா இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கு செபி தடை விதித்திருக்கிறது.
விஜய் மல்லையா ஒரு காலத்தில் தனக்கு சொந்தமானதாக யுனைடெட் பிரிவரிஸ் நிறுவனத்தின் பங்குகள் தற்போதும் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகமாகின்றன. யார் வேண்டுமானாலும் அவற்றை வாங்கலாம் யார் வேண்டுமானாலும் இந்த நிறுவன பங்குகளில் தற்போது முதலீடு செய்யலாம். தற்போது இந்த நிறுவனத்தின் பங்குகள் பெரும்பாலும் முதலீட்டு நிறுவனங்கள் வசம் சென்றுவிட்டன.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications