டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்களை வாங்குவதற்கு பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டுவது தெரிய வந்துள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தற்போது பல்வேறு வழித்தடங்களில் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகின்றன.
வேகம், நவீன தொழில்நுட்பங்கள் என அனைத்து அம்சங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் பெயர் பெற்றுள்ளன. இந்நிலையில் கனடா , சிலி, மலேசியா உள்ளிட்ட நாடுகள் வந்தே பாரத் ரயில்களை வாங்குவதற்கும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கும் ஆர்வம் காட்டுவது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படக்கூடிய வந்தே பாரத் ரயில்களின் விலை குறைவு என்பதுதான் இதற்கு முக்கிய காரணம். ஏனெனில் இதே சிறப்பு அம்சங்கள் கொண்ட ரயில் பெட்டிகளை வெளிநாடுகளில் தயாரிக்கும் போது 160 முதல் 180 கோடி ரூபாய் வரை செலவாகிறது. இந்தியாவில் 120 முதல் 130 கோடி ரூபாய்க்கு உள்ளாகவே இத்தகைய ரயில்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
எனவே வேகத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போதும் கூட மற்ற ரயில்களுடன் ஒப்பிடும்போது வந்தே பாரத் ரயில்கள் 52 நொடிகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டி விடுகிறது. இது ஜப்பானின் புல்லட் ரயில் கூட 54 நொடிகளில் தான் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்று வேகத்தை எட்டுகிறது. இதுவும் வெளிநாடுகள் வந்தே பாரத் ரயில்களை வாங்க ஆர்வம் காட்டுவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.
வந்தே பாரத் ரயில்களில் எரிபொருள் பயன்பாடு குறைவாக இருக்கிறது. எனவே இத்தகைய நவீன அம்சங்கள் கொண்ட மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் ரயில்களுடன் ஒப்பிடும் போது, அனைத்து அம்சங்களிலும் இது சிறந்ததாக இருக்கிறது என்பதால் இதனைக் வாங்க வெளிநாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. மத்திய அரசும் இந்த ரயில்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாட்டில் புதிதாக 31 ஆயிரம் கிலோ மீட்டர் ரயில் பாதைகள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூடுதலாக 40,000 ரயில் பாதைகள் சேர்க்கப்பட வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் புல்லட் ரயில் தயாரிக்கும் தயாரிக்கும் பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கிய கவனம் செலுத்தி வருவதாகவும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பான காவச் அமைப்புகளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிறுவுவதில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். காவச் அமைப்பு நிறுவப்பட்ட இடங்களில் எல்லாம் ரயில் விபத்துகள் நேரிடுவது 80 சதவீதம் வரை குறைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications