முன்னணிப் பொதுத்துறை வங்கியான கனரா வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்குப் பெரும் நிம்மதியளிக்கும் விதமாக,ஜூன் 1, 2025 அதாவது இன்று முதல் தனது அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தேவைகளை (Minimum Balance Requirements) நீக்குவதாக அறிவித்துள்ளது. இந்தப் புதிய விதி மாற்றம், வழக்கமான, சம்பளம் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) கணக்குகள் உட்பட அனைத்து வகையான சேமிப்புக் கணக்குகளுக்கும் பொருந்தும் என்பதால், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்குப் பெரும் பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து கணக்கு வகைகளுக்கும் ஜீரோ அபராதம்: இதுவரை, கனரா வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்குகளில் சராசரி மாதாந்திர இருப்பை (Average Monthly Balance - AMB) ஒரு குறிப்பிட்ட தொகைக்குக் குறையாமல் வைத்திருக்க வேண்டியிருந்தது. எடுத்துக்காட்டாக, நகர்ப்புறக் கிளைகளில் ரூ.2,000, சிறு நகரக் கிளைகளில் ரூ.1,000, மற்றும் கிராமப்புறக் கிளைகளில் ரூ.500 என AMB பராமரிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. இந்த இருப்பைப் பராமரிக்கத் தவறினால், அபராதக் கட்டணங்கள் விதிக்கப்பட்டு வந்தன.

ஆனால், ஜூன் 1, 2025 முதல், இந்தக் கட்டணங்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன. கனரா வங்கி தனது X பக்கத்தில், சுதந்திரத்தை உணருங்கள், வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளது. ஜூன் 1, 2025 முதல், குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்காததற்கு கனரா வங்கி எந்த அபராதமும் விதிக்காது. அனைத்து சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும்! என்று பதிவிட்டுள்ளது. இதன் மூலம், கனரா வங்கி, உலகளவில் உண்மையான பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்குகளை வழங்கும் முதல் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்குப் பெரும் நன்மை: இந்த நடவடிக்கையின் மூலம், கனரா வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் லட்சக்கணக்கானோர் இனி தங்கள் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்காததற்காக அபராதங்களைச் சந்திக்க நேரிடாது. இந்தப் புதிய கொள்கையின் மூலம், கனரா வங்கி சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் இப்போது அனைத்து சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கும் 'குறைந்தபட்ச இருப்புக்கு அபராதம் இல்லை சராசரி மாதாந்திர இருப்பு தொடர்பான அபராதங்கள் அல்லது கட்டணங்கள் இல்லாமல் உண்மையான முறையில் அனுபவிப்பார்கள்,என்று வங்கி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய விதி, சம்பளம் வாங்கும் ஊழியர்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) மற்றும் புதிய கணக்கு வைத்திருப்பவர்கள் உட்படப் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும். இது தினசரி வங்கிச் சேவையை எளிதாகவும், எவ்வித அபராதக் கட்டணங்களும் இன்றி அணுகக்கூடியதாகவும் மாற்றும். நிதிச் சேவைகளை மேலும் உள்ளடக்கியதாக மாற்றுவதற்கான ஒரு முக்கியப் படியாக இது பார்க்கப்படுகிறது. இந்த முடிவு, சிறிய சேமிப்பாளர்கள் மற்றும் பல்வேறு சலுகை இல்லாதப் பிரிவினரின் வங்கிச் சேவையை மேலும் எளிதாக்கும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications