பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் மூலதன செலவினங்களை மேற்கொள்வதில் அதிக முக்கியத்துவம் அளித்து வந்தது.
மேலும் கடந்த சில பட்ஜெட்டுகளில் மூலதன செலவினங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்த சூழலில், இனிமேல் வளர்ச்சிக்காக மூலதன செலவினங்கள் அதிகரிப்பை மட்டுமே நம்பி கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது, நுகர்வை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே வளர்ச்சி சாத்தியமாகும் என்பதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உணர்ந்து கொண்டுள்ளார்.

இதனால் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், வரி குறைப்பு உள்ளிட்ட நுகர்வை அதிகரிக்கும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
பொருளாதார வளர்ச்சிக்கான பாதையை மோடி அரசு மாற்றி கொண்டிருப்பது மத்திய பட்ஜெட்டில் தெள்ள தெளிவாக தெரிகிறது. இதன் தாக்கம் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. உதாரணமாக இன்று பங்குச் சந்தையில் எஃப்எம்சிஜி இன்டெக்ஸ் 3 சதவீதம் ஏற்றம் கண்டது. ராடிகோ கேத்தான், கோத்ரெஜ் கன்ஸ்யூமர் மற்றும் யுனைடெட் ஸ்பிரிட் போன்ற பங்குகளின் விலை கிடுகிடுவென ஏற்றம் கண்டது.
மேலும், நுகர்வோர் சார்ந்த பங்குகளான ஐடிசி, டிரெண்ட், டாடா கன்ஸ்யூமர் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகளின் விலை ஏற்றம் கண்டது. அதேசமயம், மூலதன செலவினங்களுடன் தொடர்புடைய எல் அண்ட்டி மற்றும் சீமென்ஸ் உள்ளிட்ட பங்குகள் அடி வாங்கின.
எதிர்வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மூலதன செலவினங்களுக்காக ரூ.11.2 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டை காட்டிலும் சிறிது மட்டுமே உயர்வாகும். மேலும், இது எதிர்பார்த்ததை காட்டிலும் மிகவும் குறைவாகும். அதேசமயம், நடுத்தர வர்த்தகத்தினருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்க வரி கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.
இந்த பட்ஜெட் நுகர்வோரை பொருளாதார வளர்ச்சியின் மையமாக நிறுத்துவதால், மோடி பங்குகள் என்றழைக்கப்படும் மூலதன செலவினங்கள் தொடர்புடைய பங்குகளின் எழுச்சியின் நீடித்த நிலைப்புத்தன்மை குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது. மறுபுறம், எஃப்எம்சிஜி, ஆட்டோ மற்றும் நுகர்வோர் சாதனங்கள் துறையை சேர்ந்த பங்குகள் லைம் லைட்டில் உள்ளன.
டிரஸ்ட் மியூச்சுவல் பண்டின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் பாக்லா கூறுகையில், வளர்ச்சிக்கான அதிகாரம் இப்போது இந்திய நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளதால், அது இப்போது இந்திய நடுத்தர வர்க்கத்தின் மீள்தன்மை மற்றும் தனியார் துறையின் ஆர்வம் ஆகியவை இந்திய பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை நிர்ணயிக்கும் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications