சென்னை: இந்தியாவின் வர்த்தக பிரிவில் ஐடி சேவைத்துறை மிகவும் முக்கியமானதாக இருக்கும் வேளையில், இத்துறையை மேம்படுத்தப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒருபக்கம் மத்திய அரசு பெங்களூர்-க்கு இணையாக ஒரு ஸ்டார்ட்அப் டெக் சிட்டி உருவாக்கும் முயற்சியில் இருக்கும் வேளையில், மாநில அரசுகள் புதிய முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.
இந்தியாவில் அதிகப்படியான ஜிசிசி நிறுவனங்கள் வரும் வேளையில் ஐடி சேவைத் துறையின் ஆதிக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது எனக் கருத்து நிலவுகிறது. ஆனால் ஐடி ஊழியர்கள் மத்தியில் இதை ஒரு ஆரோக்கியமான மாற்றமாகக் கருதுகின்றனர்.

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இருந்தாலும் இந்தியாவில் அதிகப்படியான ஊழியர்களை வைத்துக்கொண்டு இயங்கும் ஐடி நிறுவனமான கேப்ஜெமினி, அதன் 1.7 லட்சம் ஊழியர்களுக்கு முக்கியமான ஒரு முதலீட்டு வாய்ப்பை கொடுத்துள்ளது.
ஒரு நிறுவனம் தனது வர்த்தகத்தையும், ஊழியர்களையும் நீண்ட கால வளர்ச்சிப் பாதையில் வைக்க வேண்டும் என்பதற்காகக் கையில் எடுக்கும் திட்டம் தான் ESOP திட்டம். இந்த திட்டம் மூலம் ஊழியர்களுக்கு நிறுவனத்தின் பங்குகளைக் கொடுத்து நிறுவனத்துடனான உறவை மேம்படுத்தும். இத்தகையை முயற்சியை அனைத்து நிறுவனங்களும் கையாளும்.
இதில் கேப்ஜெமினி ஒரு படிக்கு மேல் சென்று, தனது 11வது ஊழியர் பங்கு உரிமை திட்டத்தில் (ESOP) அனைத்து தரப்பு ஊழியர்களும் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ESOP பங்குகளை வாங்கக் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ள அனைத்து ஊழியர்களும் பங்குகளை வாங்கத் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இதைத் தொடர்ந்து ESOP இல் பங்கேற்க, தேவையான குறைந்தபட்ச முதலீடு 100 யூரோக்கள், இது சுமார் ரூ.9,000 மட்டுமே. கேப்ஜெமினி ESOP திட்டத்தைக் குறித்துக் கூறுகையில், ஊழியர்கள் அதிகபட்சமாகத் தனது ஆண்டு சம்பளத்தில் 25% தொகையை முதலீடு செய்து ESOP திட்டத்தின் வாயிலாகப் பங்குகளை வாங்க முடியும்.
இந்த அடிப்படைத் தகுதியை வைத்துப் பார்க்கும் போது ESOP திட்டத்தில் சுமார் 97% ஊழியர்களைப் பங்கேற்கும் தகுதியை வைத்துள்ளனர். இந்த திட்டத்தின் வாயிலாக கேப்ஜெமினி தனது ஊழியர்களுக்கு 27 லட்சம் பங்குகள் வரை விற்பனை செய்ய அனுமதிக்கிறது.
திட்டத்தின் கீழ், ஊழியர்கள் யூரோக்களில் முதலீடு செய்வார்கள், மேலும் இந்த முதலீட்டின் வாயிலாகப் பங்குகளை வாங்குவோர் ஐந்து ஆண்டுகளுக்கு லாக்இன் காலத்தைக் கொண்டு இருக்கும். இந்த காலத்தின் போது, அவர்கள் கேப்ஜெமினியின் பங்குகளில் ஏற்படும் விலை உயர்வின் மூலம் நேரடியாகப் பலன் அடைவார்கள்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

CEOக்களுக்கு சம்பளத்தை அள்ளி கொடுத்து ஊழியர்களுக்கு கிள்ளி கொடுக்கும் நிறுவனங்கள்!! இதெல்லா நியாயமா?

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 முறை பதவி உயர்வு.. இதுக்கு மேல என்ன வேண்டும் சொல்லுங்க..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications