டெல்லி: பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி கிடையாது என அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து வருமான வரி செலுத்துவோர் மத்தியில் மூலதன ஆதாயங்கள் எப்படி கணக்கீடு செய்யப்படும் என்ற குழப்பம் ஏற்பட்டது.
உதாரணமாக ஒரு நபரின் ஒரு ஆண்டு வருமானம் 13 லட்சம் ரூபாய், அதில் 12 லட்சம் ரூபாய் சம்பளம், 1 லட்சம் ரூபாய் மூலதன ஆதாயம் எனும் போது அவருக்கு எப்படி வரி கணக்கிடப்படும்? ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை என்ற அறிவிப்பு இவர்களுக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் நிதி மசோதா 2025 இன் முக்கிய அம்சங்களை தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் மூலதன ஆதாயங்கள் பிரிவு 87A தள்ளுபடி கணக்கிடுவதில் இருந்து விலகளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தகவலில் தனி நபர்கள் புதிய வரி கணக்கு நடைமுறையில் பிரிவு 115 பிஏசி-ஐ (Section 115BAC) தேர்வு செய்யும் போது சிறப்பு விகிதங்களில் வரி வசூலிக்க தகுதி பெற்ற மூலதன ஆதாயங்கள் உள்ளிட்டவைகளுக்கு பிரிவு 87ஏ வின் கீழ் கிடைக்கும் வரி தள்ளுபடியில் இருந்து விலக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதாவது ஒரு நபர் ஒரு ஆண்டுக்கு 13 லட்சம் ரூபாய் வருமானமாக ஈட்டு இருக்கிறார். அதில் 1 லட்சம் ரூபாய் மூலதன ஆதாயம் எனும் போது இந்த 1 லட்சம் ரூபாய் அந்த மொத்த வருமானமான 13 லட்சம் ரூபாயிலிருந்து கழிக்கப்பட்டு அந்த நபருக்கு ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் வருமான வரி கழிவு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வருமானம் போக மூலதன ஆதாயத்தால் தாங்கள் அதிக வருமானவரி விகிதத்திற்குள் வந்து விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்தவர்களுக்கு பதில் கிடைத்துள்ளது.
ஆனால் புதிய வருமான வரி கணக்கு நடைமுறையில் நடைமுறையை தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாம் நாம் ஒரு குறிப்பிட்ட முதலீட்டை மேற்கொண்டு அந்த முதலீட்டை விற்பனை செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கக்கூடிய லாபத்தை தான் மூலதன ஆதாயம் என அழைக்கிறோம்.
உதாரணமாக ஒரு நிறுவனத்தின் பங்கை நீங்கள் 1 லட்சம் ரூபாய்க்கு வாங்கி அதனை 1.20 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறீர்கள் எனும் போது 20,000 ரூபாய் லாபம் மூலதன ஆதாயம் ஆகும். குறிப்பிட்ட பங்கை வாங்கி 12 மாதங்களுக்குள் விற்பனை செய்திருந்தால் குறுகிய கால மூலதன ஆதாயம் என கணக்கீடு செய்யப்படுகிறது இதற்கு 20% வரி விதிக்கப்படுகிறது. நீங்கள் 12 மாதங்களுக்கு மேல் வைத்திருந்து பின்னர் அதனை விற்பனை செய்து லாபமீட்டினால் அது நீண்ட கால மூலதன ஆதாயமாக கருதப்பட்டு 12.5 சதவீதம் வரி விதிக்கப்படும்.
Story written : Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications