சென்னை: இந்தியாவில் உள்ள சாலைகள் பெரும்பாலும் வாகனங்களால் நிரம்பி வழிகின்றன. இதனால் வாகனம் ஓட்டுவது, ஓட்டுநர்களுக்கு சவாலான பணியாக மாறி வருகிறது. எவ்வளவு கவனமாக வாகனம் ஓட்டினாலும், போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்தாலும் விபத்துக்கள் நேரிட வாய்ப்புள்ளது. இந்தியாவில் விபத்து ஏற்பட்டால் அதன் பிறகு கார் இன்சூரன்ஸ் கிளைம் செய்யும் செயல்முறை, தற்போது எளிதானதாக மாறிவிட்டது. விபத்து ஏற்பட்டால் அதன் பிறகு கார் காப்பீட்டை எவ்வாறு பெறுவது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலின் காரணமாக கார் இன்சூரன்ஸ் கிளைம் செயல்முறை நெறிப்படுத்தப்பட்டுள்ளது. கார் இன்சூரன்ஸ் கிளைம் செய்யும்போது, சில முக்கிய ஆவணங்களைத் தயாராக வைத்திருப்பது அவசியம். இவை இன்சூரன்ஸ் நிறுவனம் உங்கள் கிளைமை விரைவாக செயல்படுத்துவதற்கு உதவும்.

கார் விபத்து இன்சூரன்ஸ் கிளைமுக்கு தேவையான ஆவணங்கள்: கிளைம் செய்யும்போது, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள், உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
1. உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியின் ஜெராக்ஸ்.
2. காவல்துறையிடமிருந்து பெறப்பட்ட FIR.
3. டிரைவரின் டிரைவிங் லைசன்ஸ் ஜெராக்ஸ்.
4. முறையாக பூர்த்தி செய்யப்பட்டு கையெழுத்திடப்பட்ட கிளைம் படிவம்.
5. பழுதுபார்ப்பதற்கு தேவையான பொருள்கள் வாங்கிய பில்கள், ரொக்க ரசீதுகள் போன்றவை.
6. உங்கள் காரின் பதிவு சான்றிதழ் (RC) ஜெராக்ஸ்.
7. உடல் காயங்கள் ஏற்பட்டால் மருத்துவ ரசீதுகள்.
விபத்துக்குப் பிறகு கார் இன்சுரன்ஸ் பெறுவதற்கான ஸ்டெப்ஸ்: உங்கள் காப்பீட்டு நிறுவனத்தில் கிளைம் பெறுவதற்கு சரியான நடைமுறையைப் பின்பற்றுவது மிக முக்கியமானது. உங்கள் கார் இன்சுரன்ஸ்-ஐ பெற உதவும் ஸ்டெப்ஸ்களைப் பார்ப்போம்.
1. உங்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிக்கவும்: முதலில் உங்கள் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு விபத்து குறித்து அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். உங்கள் வாகனத்திற்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றிய விரிவான தகவல்களை வழங்கவும். இந்த செயமுறையின் போது வெளிப்படைத்தன்மையுடன் இருப்பது அவசியம்.
2. காவல்துறையில் FIR பதிவு செய்யுங்கள்: விபத்து, திருட்டு அல்லது குறிப்பிடத்தக்க சேதத்தை உள்ளடக்கியிருந்தால், நீங்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து FIR பதிவு செய்ய வேண்டும். சிறிய கீறல்களுக்கு FIR தேவையில்லை. ஆனால் தீவிரமான சம்பவங்களுக்கு இது தேவைப்படுகிறது. இன்சூரன்ஸ் கிளைம் செயல்முறைக்கு தேவைப்படும் என்பதால், FIR-இன் நகலைப் பெறுவதை உறுதிசெய்யவும்.
3. புகைப்படங்களை எடுத்து வையுங்கள்: தெளிவான மற்றும் விரிவான புகைப்படங்களை எடுத்து விபத்து நடந்த இடத்தையும் உங்கள் வாகனத்திற்கு ஏற்பட்ட சேதங்களையும் புகைப்படம் எடுத்து வையுங்கள். இந்த படங்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கு சேதங்களின் அளவை மதிப்பிடவும் உங்கள் கோரிக்கையை செயல்படுத்தவும் உதவும்.
4. காப்பீட்டாளரிடம் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும்: உங்கள் கோரிக்கையைச் செயல்படுத்த, உங்கள் காப்பீட்டு நிறுவனத்திடம் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இவற்றில் பொதுவாக உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி ஜெராக்ஸ், FIR, ஓட்டுநர் உரிமம் மற்றும் காரின் பதிவுச் சான்றிதழ் (RC) ஆகியவை அடங்கும். இன்சூரன்ஸ் கிளைம் செயல்பாட்டில் தாமதங்களைத் தவிர்க்க, அனைத்து ஆவணங்களும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.
5. உங்கள் காரைப் பழுது பார்க்கவும்: உங்கள் காரை பழுதுபார்ப்பதற்காக கேரேஜுக்கு எடுத்துச் செல்லலாம் அல்லது பழுதுபார்ப்பைக் கையாள உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கேட்கலாம்.
6. திருட்டு: உங்கள் கார் திருடப்பட்டால், உங்கள் காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரியப்படுத்தவும், உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யவும். RC, ஓட்டுநர் உரிமம் மற்றும் FIR போன்ற தேவையான ஆவணங்களை காப்பீட்டாளரிடம் சமர்ப்பிக்கவும். ஒரு நியாயமான நேரத்திற்குள் உங்கள் காரை மீட்டெடுக்க முடியாமல் போனால், அவர்கள் கண்டுபிடிக்க முடியாத சான்றிதழை வழங்குவார்கள். காப்பீட்டு நிறுவனம் உங்கள் காரின் தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் கோரிக்கையைத் தீர்க்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications