மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்த 3ஆம் தரப்பு மோட்டார் இன்சூரன்ஸ் ப்ரிமியம் திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூன் 1, 2022 முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்தக் கட்டணங்கள் கடைசியாக 2019-20 நிதியாண்டில் திருத்தப்பட்டன, ஆனால் கொரோனா தொற்று நோயின் காரணமாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
கார்-களுக்கான ப்ரீமியம்
சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பு படி 1000 சிசி-க்கு மிகாமல் இருக்கும் தனியார் கார்களுக்கான மூன்றாம் தரப்பு காப்பீட்டின் ஆண்டு ப்ரீமியம் 2019-20ல் ரூ. 2,072 லிருந்து ரூ.2,094 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டணங்களின் கீழ், 1000 சிசி முதல் 1500 சிசி வரையிலான இன்ஜின் திறன் கொண்ட தனியார் கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு ப்ரீமியம் 2019-20ல் ரூ.3,221ல் இருந்து ரூ.3,416 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
1500 சிசி-க்கு மேல் எஞ்சின் திறன் கொண்ட பெரிய தனியார் வாகனங்களின் ப்ரீமியம் ரூ.7,897ல் இருந்து ரூ.7,890 ஆக குறைய உள்ளது.
புதிய கார்கள்
இதேபோல் 1000 சிசி-க்கு மிகாமல் இருக்கும் புதிய காருக்கு மூன்றாண்டுக்கான சிங்கிள் ப்ரீமியம் ரூ.6,521 ஆகவும், 1000 சிசி முதல் 1500 சிசி வரையிலான காருக்கு ரூ.10,640 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக அறிவிக்கப்பட்ட கட்டணங்களின் கீழ் 1500 சிசி-க்கு மேற்பட்ட புதிய கார்களுக்கான மூன்று ஆண்டுகளுக்குக் காப்பீடு தொகை ரூ.24,596க்கு ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பைக்
150 சிசி-க்கு மேல் ஆனால் 350 சிசி-க்கு மிகாமல் இருக்கும் இரு சக்கர வாகனங்களுக்குக் காப்பீட்டு ப்ரீமியம் ரூ. 1,366 ஆகவும், 350 சிசி-க்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கான ஆண்டு ப்ரீமியம் ரூ.2,804 ஆக விதிக்கப்படும்.
புதிய பைக்
75 சிசி-க்கு மிகாமல் இருக்கும் இரு சக்கர வாகனங்களுக்கு ஐந்தாண்டு ஒற்றை ப்ரீமியம் ரூ. 2,901, 75 சிசி-க்கு மேல் ஆனால் 150 சிசி கீழ் இருக்கும் வாகனங்களுக்கு ரூ.3,851.
150 சிசி-க்கு மேல் ஆனால் 350 சிசி கீழ் இருக்கும் வாகனங்களுக்கு ரூ.7,365. இதோடு 350 சிசி-க்கு மேல் உள்ள இரு சக்கர வாகனம் ஐந்தாண்டுகளுக்கு ரூ.15,117 ஆகப் புதிய காப்பீடு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
எலக்ட்ரிக் கார்கள்
ஒரு தனிநபர் புதிதாக வாங்கும் எலக்ட்ரிக் கார்களின் சக்தி 30 KW க்கு குறைவாக இருந்தால், மூன்று ஆண்டுகளுக்கான காப்பீட்டு அளவு 5,543 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இதேபோல் 30 KW-க்கு மேல் மற்றும் 65 KW-க்குக் கீழ் இருக்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மூன்று வருட ப்ரீமியம் ரூ 9,044 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
மேலும் 65 KW-க்கும் அதிகமான திறன் கொண்ட பெரிய எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மூன்று ஆண்டுகளுக்கு இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை 20,907 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications