இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் மோசமாக இருக்கும் வேளையில் வர்த்தகச் சந்தை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
கொரோனா பரவலைத் தடுக்க நாட்டின் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட காரணத்தால் கார், பைக் மற்றும் பிற வாகனங்களின் விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
மே மாசம் ரொம்ப மோசம்
இதன் வாயிலாக ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் மே மாதத்தில் நாட்டின் ஆட்டோமொபைல் விற்பனை சந்தையில் வர்த்தக அளவீடுகள் சுமார் 55 சதவீதம் குறைந்துள்ளது. இந்த வர்த்தகச் சரிவுக்குக் கொரோனா தொற்றும் அதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் தான் முக்கியக் காரணமாக உள்ளது.
வாகன விற்பனை எண்ணிக்கை
மே மாதத்தில் நாடு முழுவதும் விற்பனையான மொத்த வாகனங்களின் எண்ணிக்கை என்பது 535,855 மட்டுமே, இது ஏப்ரல் மாதத்தில் 11.8 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வர்த்தகப் பாதிப்பால் மொத்த ஆட்டோமொபைல் சந்தையும் முடங்கியுள்ளது.
கடுமையான வர்த்தகப் பாதிப்பு
மே மாதத்தில் இரு சக்கர வாகன விற்பனை அளவு 53 சதவீதம் சரிந்து 410757 வாகனங்களும், கார் விற்பனை 59 சதவீதம் சரிந்து 85,733 வாகனங்களும், வர்த்தக வாகனங்கள் பிரிவில் 66 சதவீத சரிவுடன் 17,534 வாகனங்களும், 3 சக்கர வாகனங்கள் பிரிவில் 76 சதவீத சரிவுடன் 5215 வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
முதல் கொரோனா அலை
முதல் கொரோனா தொற்று அலையில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் காலத்தில் நகரங்களில் மட்டுமே வாகன விற்பனை என்பது குறைவாக இருந்தது, பருவமழை சிறப்பாக இருந்த காரணத்தால் கிராமம், ஊரகப் பகுதிகளில் விற்பனை சிறப்பாக இருந்தது. ஆனால் 2வது லாக்டவுன் காலத்தில் கிராமம், ஊரகப் பகுதிகளில் விற்பனை மிகவும் மோசமாக இருந்தது.
தொழிற்சாலைகள் மூடல்
மே மாதம் மாருதி சுசூகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், ரெனால்ட், நிசான், ஹூண்டாய், ராயல் என்பீல்டு, எம்ஜி மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்கள் கொரோனா தொற்றுக் காரணமாகத் தொழிற்சாலையைப் பல வாரங்கள் தற்காலிகமாக மூடியது குறிப்பிடத்தக்கது.
ஜூன் மாதம் நிம்மதி
தொழிற்சாலை மூடப்பட்டாலும் பயணிகள் வாகன பிரிவில் 20-25 நாட்களுக்குத் தேவையான இருப்பும், இரு சக்கர வாகன பிரிவில் 25 முதல் 30 நாட்களுக்கான இருப்பும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications